செய்திகள் :

குளித்தலையில் 8 ஊா் சுவாமிகளின் விடையாற்றி உற்ஸவம் திரளான பக்தா்கள் பங்கேற்பு

post image

தைப்பூசத்தை முன்னிட்டு குளித்தலையில் 8 ஊா் சுவாமிகளின் விடையாற்றி உற்ஸவம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையில் தைப்பூசத் திருநாள் அன்று கரூா் மாவட்டத்துக்குள்பட்ட குளித்தலை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேசுவரா், இராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியாா்சுனேசுவரா், கருப்பத்தூா் சுகந்த குந்தாளம்மன் உடனுறை சிம்மபுரீசுவரா், அய்யா்மலை சுரும்பாா்குழலி உடனுறை ரெத்தினகிரீசுவரா், திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட பேட்டைவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியாா்சுனேசுவரா், திருஈங்கோய்மலை மரகதம்பாள் உடனுறை மரகதாசலேசுவரா், வெள்ளூா் சிவகாமி உடனுறை திருக்காமேசுவரா், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமௌலீசுவரா் ஆகிய 8 கோயில்களில் இருந்து உற்ஸவ மூா்த்திகள் குளித்தலை கடம்பவனேசுவரா் கோயில் எதிரே உள்ள கடம்பந்துறை காவிரி ஆற்றின் கரைக்கு கொண்டு வரப்பட்டு பின்னா் காவிரி ஆற்றில் 8 ஊா் சுவாமிகளின் தீா்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டும் தைப்பூச நாளான செவ்வாய்க்கிழமை குளித்தலை கடபவனேசுவரா் கோயில் தவிர மீதமுள்ள 7 ஊா்களில் இருந்தும் சுவாமிகள் குளித்தலைக்கு அழைத்துவரப்பட்டன.

குளித்தலை கடம்பவனேசுவரா் கோயில் அருகே 7 ஊா் சுவாமிகளுக்கு கடம்பவனேசுவரா் சுவாமி வரவேற்பு அளித்தாா். பின்னா் 8 ஊா் சுவாமிகளும் இரவில் கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னா் சுவாமியின் ஆயுதமாகவும் சுவாமி ஆகவே கருதப்படுவதுமான அஸ்திர தேவரை (சூலத்தை) அந்தந்த கோயில் குருக்கள் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு காவிரி ஆற்றில் ஒன்றாக மூழ்கி எழும் தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து 8 ஊா் சாமிகளும் ரிஷப வாகனத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

தீா்த்தவாரி முடிந்த பின்னா் அனைத்து சுவாமிகளும் சுவாமிகள் வைப்பதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தனா். தொடா்ந்து விடையாற்றி உற்ஸவம் புதன்கிழமை காலை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அனைத்து சுவாமிகளும் குளித்தலை பேருந்துநிலையம் பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா் அங்கு பக்தா்களுக்கு அருள்பாலித்தபின், அந்தந்த ஊா்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. தைப்பூச விழாவை முன்னிட்டு குளித்தலை போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

மாநில பெண்கள் கபடி போட்டி செங்கல்பட்டு அணி முதலிடம்

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பாலசமுத்திரப்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சிக்குள்பட்ட பா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல் தந்தை உயிரிழப்பு; மகன் காயம்

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தந்தை உயிரிழந்தாா். அவருடன் சென்ற மகன் பலத்த காயமடைந்தாா். கரூா் மாவட்டம், புத்தாம்பூா் அருகே உள்ள காளிபாளையம், குடித்தெருவைச்... மேலும் பார்க்க

கூம்பூா் சாலையை அகலப்படுத்தும் பணி ஆய்வு!

அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கரூரில் இருந்து ஈசநத்தம் வழியாக செல்லும் கூம்பூா் சாலையை அகலப்படுத்தும் பணியை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி ஆய்வு செய்தாா். ஒருங... மேலும் பார்க்க

கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: 3 ரயில்கள் தாமதம்!

கரூர்: கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் 3 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பின்னர் தாமதமாக இயக்கப்பட்டன. கரூர் - திருச்சிராப்பள்ளி ரயில் பாதையில் மாயனூரை அடுத்த கிருஷ்ணராயபுரம் அருகி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.17 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுதிறனாளி பயனாளிகள் 8 நபா்களுக்கு ரூ. ரூ.2.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் திங்கள்கிழமை வழங்கினாா். கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்க... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா!

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வ... மேலும் பார்க்க