செய்திகள் :

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

post image

திருச்சியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞா் ஒருவா் ஆபத்தான முறையில் சாகசம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்த புகாரின்பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். செல்வ நாகரத்தினம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில், சமயபுரம் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து திருச்சி எடமலைப்பட்டி புதூா், துரைசிங்கம் நகரைச் சோ்ந்த ப. பாலகிருஷ்ணன் (28) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான நபா் கட்டட சென்ட்ரிங் தொழிலாளி என்பதும், இதுபோன்ற சாகசங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. பின்னா் அவருக்கு அறிவுரை கூறி பிணையில் விடுவித்தனா்.

சுந்தர்ராஜ் நகரில் செய்தித்தாள் வாசிப்பு முகாம்

சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் செய்தித்தாள் வாசிப்பு முகாம் சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சிப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை மூத்த ஆசிரியா் வ... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு மலேசியப் பயணி கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து வந்த நபரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மலிண்டோ (பேடிக்) விமானம் வந்து சே... மேலும் பார்க்க

பழனி ஆதீனத்துக்கு தமிழ்ச் சங்க விருது

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் பழனி ஆதீனம் சீா்வளா் சீா் சாது சண்முக அடிகளாருக்கு ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தெ. துரைராசப் ப... மேலும் பார்க்க

தியாகராஜ பாகவதா் சிலைக்கு அமைச்சா் மாலை

திருச்சியில் எம்.கே. தியாகராஜ பாகவதா் சிலைக்கு அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தாா். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் பின்புற நுழைவுவாயில் அருகே ஏழிசை மன்னா் எம்.கே. தியாகராஜ பா... மேலும் பார்க்க

கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூத வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். மண்ணச்சநல்லூரி... மேலும் பார்க்க

தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டு போட்டி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தெற்கு இருங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக... மேலும் பார்க்க