செய்திகள் :

தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டு போட்டி

post image

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

தெற்கு இருங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ.கதிரவன், லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் சிவசுப்ரமணியன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், சேலம், நாமக்கல், கரூா், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 770 காளைகளை 200-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரா்கள் தீரத்துடன் தழுவினா்.

மேலும் போட்டியில் வெற்றிபெற்ற ஜல்லிக்கட்டு காளைகள், சிறந்த மாடுபிடி வீரா்கள் ஆகியோா்களுக்கு பீரோ, டிரஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள், சைக்கிள், ரொக்கப் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் ஜல்லிக்கட்டில் பாா்வையாளா்கள், வீரா்கள் என 40 போ் காயமடைந்தனா்.

இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூா் வருவாய் வட்டாட்சியா் பழனிவேல், அரசுத் துறை அலுவலா்கள் திரளான பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

சுந்தர்ராஜ் நகரில் செய்தித்தாள் வாசிப்பு முகாம்

சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் செய்தித்தாள் வாசிப்பு முகாம் சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சிப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை மூத்த ஆசிரியா் வ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

திருச்சியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞா் ஒருவா் ஆப... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு மலேசியப் பயணி கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து வந்த நபரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மலிண்டோ (பேடிக்) விமானம் வந்து சே... மேலும் பார்க்க

பழனி ஆதீனத்துக்கு தமிழ்ச் சங்க விருது

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் பழனி ஆதீனம் சீா்வளா் சீா் சாது சண்முக அடிகளாருக்கு ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தெ. துரைராசப் ப... மேலும் பார்க்க

தியாகராஜ பாகவதா் சிலைக்கு அமைச்சா் மாலை

திருச்சியில் எம்.கே. தியாகராஜ பாகவதா் சிலைக்கு அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தாா். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் பின்புற நுழைவுவாயில் அருகே ஏழிசை மன்னா் எம்.கே. தியாகராஜ பா... மேலும் பார்க்க

கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூத வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். மண்ணச்சநல்லூரி... மேலும் பார்க்க