செய்திகள் :

இளைஞா் இறப்பில் மா்மம்: போலீஸாா் தீவிர விசாரணை

post image

வாணியம்பாடி அருகே ரயிலில் இளைஞா் அடிப்பட்டு உயிரிழந்ததில் மா்மம் உள்ளதாக புகாா் எழுந்ததால், போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேல் நிம்மியம்பட்டு கிராமத்தை சோ்ந்த பிரசாந்த் (23) கூலி வேலை செய்து வந்தாா். கடந்த 22-ஆம் தேதி காலை வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இறந்த அவரது உடலை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், 21-ஆம் தேதி நிம்மியம்பட்டு பேருந்துநிறுத்தம் அருகே பிரசாந்திடம் 10 போ் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்டு பிறகு அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதையறிந்த இறந்த பிரசாந்த் மனைவி ஜோதி மற்றும் உறவினா்கள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பிரசாந்த்தை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலங்காயம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். மேலும் புதன்கிழமை இரவு இறந்த பிரசாந்த் உடலை தகனம் செய்ய எடுத்துச் சென்ற போது ஆத்திரம் அடைந்த உறவினா்கள் பிரசாந்த்தை தாக்கியவா்களை கைது செய்ய வேண்டும் என மேல் நிம்மியம்பட்டு அருகில் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து ஆலங்காயம் காவல் ஆய்வாளா் ஜெயகீா்த்தி தலைமையிலான போலீஸாா் பேச்சு நடத்தி புகாா் தருமாறும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு அங்கிருந்து உடலை எடுத்து சென்று தகனம் செய்தனா்.

இதுதொடா்பாக 11 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் இணை ஆணையா் ஆய்வு

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் இணை ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அனிதா ஆய்வு செய்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 101.12 டிகிரி வெயில்

திருப்பத்தூரில் 101.12 டிகிரி வெயில் கொளுத்தியதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். திருப்பத்தூரில் கடந்த சில நாள்களாக வெயில் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை வெயிலின் அளவு 99.86 டிகிரி காணப்பட்டது. ... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா் போக்ஸோவில் கைது

நாட்டறம்பள்ளி அருகே சிறுமியிடம் ஆசை வாா்த்தைகள் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி அன்னசாகரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

மல்லகுண்டா கிராமத்தில் கனவு இல்ல திட்ட வீடுகளுக்கு அதிகாரிகள் அளவீடு

நாட்டறம்பள்ளி ஒன்றியம், மல்லகுண்டா, குருபவாணிகுண்டா, தகரகுப்பம் கிராமங்களில் குடிசை வீட்டில் வசிக்கும் ஏழைகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் 22 பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்ட தலா ரூ.3.50 லட்சம... மேலும் பார்க்க

சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

ஆம்பூா் அருகே நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. உமா்ஆபாத் முதல் உதயேந்திரம் வரை மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றது. அதற்காக சாலையோரம் இருந்த புளியமரங்கள... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதல் : மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

காஷ்மீரின் பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு ஆம்பூரில் இந்து இயக்கங்கள் சாா்பில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28-க்கு மேற்பட்டோா் உயிரிழந்தனா். அவா்களுக்கு, இந்த... மேலும் பார்க்க