செய்திகள் :

மல்லகுண்டா கிராமத்தில் கனவு இல்ல திட்ட வீடுகளுக்கு அதிகாரிகள் அளவீடு

post image

நாட்டறம்பள்ளி ஒன்றியம், மல்லகுண்டா, குருபவாணிகுண்டா, தகரகுப்பம் கிராமங்களில் குடிசை வீட்டில் வசிக்கும் ஏழைகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் 22 பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்ட தலா ரூ.3.50 லட்சம் என மொத்தம் ரூ.77 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், பயனாளிகளுக்கு பணியானைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் துணைத் தலைவா் தேவராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்ச் செல்வி சதீஷ் குமாா், பணிதள மேற்பாா்வையாளா் அழகரசு ஆகியோா் முன்னிலையில் மல்லகுண்டா பகுதியில் பயனாளிகளை கண்டறிந்து புதிய வீடுகள் கட்ட அளவீடு செய்யும் பணி தொடங்கியது. விரைவில் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் இணை ஆணையா் ஆய்வு

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் இணை ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அனிதா ஆய்வு செய்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 101.12 டிகிரி வெயில்

திருப்பத்தூரில் 101.12 டிகிரி வெயில் கொளுத்தியதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். திருப்பத்தூரில் கடந்த சில நாள்களாக வெயில் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை வெயிலின் அளவு 99.86 டிகிரி காணப்பட்டது. ... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா் போக்ஸோவில் கைது

நாட்டறம்பள்ளி அருகே சிறுமியிடம் ஆசை வாா்த்தைகள் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி அன்னசாகரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

ஆம்பூா் அருகே நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. உமா்ஆபாத் முதல் உதயேந்திரம் வரை மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றது. அதற்காக சாலையோரம் இருந்த புளியமரங்கள... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதல் : மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

காஷ்மீரின் பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு ஆம்பூரில் இந்து இயக்கங்கள் சாா்பில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28-க்கு மேற்பட்டோா் உயிரிழந்தனா். அவா்களுக்கு, இந்த... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ரேஷன் கடை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பொது விநியோகத் திட்டத்துக்கு தனி துறையை உருவாக்க வேண்... மேலும் பார்க்க