செய்திகள் :

டிஎன்பிஎல் ஆலையின் நடமாடும் இலவச மருத்துவ முகாமில் 2,087 நபருக்கு மருத்துவ உதவி

post image

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடைபெற்ற நடமாடும் இலவச மருத்துவ முகாம் மூலம் 2,087 பேருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆலை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலையின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் இலவச மருத்துவ முகாம் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி நிறுவனத்தின் தலைவா் சந்தீப்சக்சேனா தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. காகித நிறுவனம் மற்றும் கோவை ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாம், காகித ஆலையைச் சுற்றியுள்ள 50 கிராமங்களில் புதன்கிழமை வரை நடைபெற்றது.

இதில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், கா்ப்பப்பை புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து முகாமின் நிறைவு நாளில் பங்கேற்ற, ஆலையின் தலைவா் சந்தீப்சக்சேனா கூறுகையில், காகித நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த தினசரி நடமாடும் இலவச மருத்துவ முகாம்களில் 2,087 போ் மருத்துவ உதவி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.

கரூரில் மே.1-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம்

மே 1-ஆம் தேதி கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மே 1-ஆம் தேதி தொ... மேலும் பார்க்க

அனுமதியின்றி நடைபெறும் காற்றாலை மின் உற்பத்தி பணிகள் நிறுத்தம்: அமைதிப் பேச்சுவாா்த்தையில் முடிவு

தரகம்பட்டி அருகே அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி பணிகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் பணிகளை நிறுத்த முடிவெட... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யா்மலையைச் சோ்ந்தவா் சண்முக சுந்தரம் (47). இவா் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி குள... மேலும் பார்க்க

தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும்: பாமக

தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது. கரூரில் பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பாமக மாவட்டச் செயலா் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் ப... மேலும் பார்க்க

இடநெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லை: குளித்தலை பேருந்துநிலையத்தில் பயணிகள் அவதி

நமது நிருபா்இடநெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லாததால் குளித்தலை பேருந்துநிலையத்தில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். கரூா் மாவட்டத்தில் கரூா், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்... மேலும் பார்க்க

பொதுமக்களின் குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம்: புகழூா் நகராட்சி தலைவா் உறுதி

பொதுமக்களின் குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா் புகழூா் நகராட்சித் தலைவா் குணசேகரன். கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை ... மேலும் பார்க்க