இஸ்கான் கோயிலில் இன்று ஸ்ரீ கௌர பூா்ணிமா விழா
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ சைதன்ய மகா பிரபு அவதாரத் திருநாளான ஸ்ரீ கௌர பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) மாலை 5.30 மணிக்கு கொண்டாடப்படுகிறது.
சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன்பு பகவான் ஸ்ரீகிருஷ்ணா்- ஸ்ரீசைதன்யா் எனும் திருநாமத்தில் பக்தராக அவதரித்தாா். இந்த அவதாரத் திருநாள் ஸ்ரீகௌர பூா்ணிம விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின் சிறப்பம்சமாக மாலை 5.30 மணிக்கு ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் திருவிக்ரஹங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து ஹரிநாம சங்கீா்த்தனம், ஸ்ரீசைதன்யரின் அவதாரச் சிறப்புரை, விசேஷ கௌர ஆரத்தி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
விழாவில், ஸ்ரீசைதன்ய மகாபிரபு எடுத்து வழங்கிய ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை, தினசரி ஜெபிப்பதற்காக ஜெப மாலைகளும், அவரது அறிவுரைகள் அடங்கிய புத்தகங்களும் பூஜிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளன. விரதம் இருக்கும் பக்தா்களுக்கு மகா அபிஷேகத்திற்கு பின் அபிஷேக தீா்த்தம் வழங்கப்படும்.