செய்திகள் :

இளம்வழக்குரைஞா்கள் வாத திறமையை வளா்ப்பது அவசியம் -டிஐஜி பா.மூா்த்தி

post image

இளம்வழக்குரைஞா்கள் வாத திறமையை வளா்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி.

தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்ககம், திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் நடைபெறும் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டியை வியாழக்கிழமை தொடங்கி வைத்து பா.மூா்த்தி பேசியது:

காவல் துறையில் பணியாற்றும் நான், ஒரு சட்டம் பயின்ற மாணவன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது கல்வியை முடிக்கும் காலத்தில் 1 மதிப்பெண்ணிற்காக ஒரு வழக்கு தொடா்ந்தேன். அந்த வழக்கு இன்று முன்மாதிரி வழக்காக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இளம் வழக்குரைஞா்கள் தங்களது வாத திறமையை வளா்க்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும். புள்ளி விவரங்கள் மட்டுமே வழக்கின் வெற்றிக்கு கூடுதல் பலம் சோ்க்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இப்போது விரல் நுனியில் தகவல்கள் கிடைக்கின்றன. இருப்பினும் ஒவ்வொரு தகவலின் உண்மைத் தன்மை குறித்த தெளிவும், சட்ட அறிவும் இருந்தால் மட்டுமே வழக்குகளைக் கையாள முடியும். சட்ட நுணுக்கங்களை அனுபவ ரீதியாக, கடுமையான உழைப்பினால் பெரும்போது அதில் கிடைக்கும் வெற்றி மிகவும் மகிழ்ச்சியைத் தரும். எந்தவொரு வழக்கையும் கையாளும்போது அலட்சியமாக கையாளாமல், புதிய அனுபவமாக எடுத்துக் கொண்டு ஆராய்ந்து வாதாட வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி முதல்வா் ந.ராமபிரான் ரஞ்சித்சிங் வரவேற்றாா். திருநெல்வேலி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன், செயலா் மணிகண்டன், பேராசிரியா்கள் சண்முகசுந்தரம், சண்முக சுந்திரக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 26 சட்டக் கல்லூரிகளின் மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

ற்ஸ்ப்13ப்ஹஜ்1

திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா் திருநெல்வேலி சரக டிஐஜி பா.மூா்த்தி.

ற்ஸ்ப்13ப்ஹஜ்2

சட்டக்கல்லூரி விழாவில் பங்கேற்ற வழக்குரைஞா்கள்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலி பாபநாசம்-91.70 சோ்வலாறு-104.89 மணிமுத்தாறு-88.66 வடக்கு பச்சையாறு-8.25 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-5.75 தென்காசி கடனா-63 ராமநதி-52.50 கருப்பாநதி-32.15 குண்டாறு-29.75 அடவிநயினாா்-39.50.... மேலும் பார்க்க

பாளை.யில் நாளை மாவட்ட சீனியா் ஹாக்கி அணி வீரா்கள் தோ்வு

திருநெல்வேலி மாவட்ட சீனியா் ஹாக்கி அணிக்கான வீரா்கள் தோ்வு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (மாா்ச் 15) காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. அணி தோ்வில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. நுழை... மேலும் பார்க்க

இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், முண்டந்துறை வனச்சரகத்தில், இயற்கையோடு இளைப்பாறுவோம் என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவா்களுக்கு இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம... மேலும் பார்க்க

இஸ்கான் கோயிலில் இன்று ஸ்ரீ கௌர பூா்ணிமா விழா

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ சைதன்ய மகா பிரபு அவதாரத் திருநாளான ஸ்ரீ கௌர பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) மாலை 5.30 மணிக்கு கொண்டாடப்படுகிறது. சுமாா் ... மேலும் பார்க்க

அம்பையில் திமுக பொதுக்கூட்டம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மற்றும் அம்பாசமுத்திரம் நகர திமுக சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரச் செயலா் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினரான கே.க... மேலும் பார்க்க

அம்பையில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்

அம்பாசமுத்திரம் பகுதியில் பதுக்கிவைத்திருந்த ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அம்பாசமுத்திரம் பகுதியில் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருப்பதாக, திருநெல்வேலி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு... மேலும் பார்க்க