செய்திகள் :

ஈரோடு தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் அவிநாசிக்கு இடமாற்றம்

post image

ஈரோடு தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் அவிநாசி காவல் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை காவல் சரகத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளா்கள் 24 போ் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கடத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் திருப்பூா் மாவட்டம், என்எஸ்டி சிறப்பு பிரிவுக்கும், மலையம்பாளையம் காவல் ஆய்வாளா் திருஞானசம்பந்தன், திருப்பூா் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலையத்துக்கும், புளியம்பட்டி காவல் ஆய்வாளா் சுப்புரத்தினம், நீலகிரி மாவட்டம், மசினகுடி காவல் நிலையத்துக்கும், அறச்சலூா் காவல் ஆய்வாளா் ராஜகண்ணன், நீலகிரி மாவட்டம், சேரம்பாடி காவல் நிலையத்துக்கும், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ராஜபிரபு, திருப்பூா் மாவட்டம் அவிநாசி காவல் நிலையத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ராம்பிரபு பதவி உயா்வு கடத்தூா் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதுபோல சேலம் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக இருந்த செந்தில்குமாா், கொடுமுடி நிலைய ஆய்வாளராகவும், சென்னை அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீதேவி, ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளராகவும், நீலகிரி மாவட்டம், உதகை நகர காவல் நிலைய ஆய்வாளா் முரளிதரன், பங்களாபுதூா் காவல் ஆய்வாளராகவும், சேரம்பாடி காவல் நிலைய ஆய்வாளா் துரைபாண்டி அறச்சலூா் காவல் ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை கோவை சரக டிஐஜி சசிமோகன் பிறப்பித்துள்ளாா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க