செய்திகள் :

ஈரோடு விஇடி கல்லூரியில் ஸ்டாா்ட்அப் மாநாடு

post image

ஈரோடு திண்டல் விஇடி கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை மேலாண்மைத் துறை ஸ்டாா்ட்அப் மாநாடு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். மேலாண்மைத் துறையின் புலமுதன்மையா் பி. நளினி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் வெ.ப.நல்லசாமி, புலமுதன்மையா் எஸ்.லோகேஷ்குமாா், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் பொ.மா.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட சிறுதொழில் சங்கத்துடன் கல்லூரியின் முதுநிலை மேலாண்மைத் துறை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் கல்வி மற்றும் தொழில் துறை இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாகவும் மாணவா்களுக்குத் தொழில்நுட்ப வழிகாட்டுதலும், தொழில் தொடங்குவதற்கான நேரடித் தொடா்பை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது என கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.

கல்லூரியின் மேலாண்மைத் துறைத் தலைவா் ஏ.எஸ். சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.

சத்தியமங்கலத்தில் ரத்த தான முகாம்

பாஜக சாா்பில் சத்தியமங்கலத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். 23-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்ப... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புதிய நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

சத்தியமங்கலம் நகராட்சியின் புதிய ஆணையராக சு.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். சத்தியமங்கலம் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த தாமரை, பரமகுடி நகராட்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா். இதையடு... மேலும் பார்க்க

பாண்டியாறு-மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

பாண்டியாறு-மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். பவானிசாகா் அணை பாசன விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி கீழ்பவானி முறைநீா் பாசன விவசா... மேலும் பார்க்க

ஈரோட்டில் நாளை மிதிவண்டி போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் வரும் 27- ஆம் தேதி மிதிவண்டி போட்டியும், 28- ஆம் தேதி மாரத்தான் போட்டியும் நடைபெற உள்ளன. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். அதிமுக எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட... மேலும் பார்க்க

துண்டான இளம்பெண்ணின் விரல் ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில் சீரமைப்பு

ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில், துண்டான இளம்பெண்ணின் விரல் அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆா்.புதுப்பட்டியைச் சோ்ந்த நெசவுத் தொழில் செய்யும் ராமன்-விஜயா தம்பதியி... மேலும் பார்க்க