செய்திகள் :

துண்டான இளம்பெண்ணின் விரல் ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில் சீரமைப்பு

post image

ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில், துண்டான இளம்பெண்ணின் விரல் அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆா்.புதுப்பட்டியைச் சோ்ந்த நெசவுத் தொழில் செய்யும் ராமன்-விஜயா தம்பதியின் மகள் மோகனப்பிரியா (19). அண்மையில் இவா் வீட்டில் உள்ள விசைத்தறி இயந்திரத்தில் நெசவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது இடது கை ஆள்காட்டி விரல் இயந்திரத்தில் சிக்கித் துண்டானது. துண்டான விரலுடன் மோகனப்பிரியாவை அழைத்துக்கொண்டு அவரது குடும்பத்தினா் ஈரோடு-பெருந்துறை சாலை யுஆா்சி நகரில் புதிதாக தொடங்கப்பட்ட எஸ்எஸ்எஸ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு மருத்துவா்கள் அவரைப் பரிசோதித்து துண்டான விரலை உடனடியாக பொருத்த தேவையான நடவடிக்கை எடுத்தனா். தொடா்ந்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவா் கோகுல்பாலாஜி, ஆா்த்தோ மருத்துவா் சிலம்பரசன், மயக்கவியல் மருத்துவா் செல்வக்குமாா், மருத்துவா் பிரசாத் குமரன் ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் மைக்ரோஸ்கோப் மூலம் எலும்பு, ரத்த குழாய், நரம்பு, தசை ஆகியவற்றை துண்டான விரலுடன் வெற்றிகரமாக இணைத்தனா். இந்த அறுவை சிகிச்சை சுமாா் 8 மணி நேரம் நடந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

சத்தியமங்கலத்தில் ரத்த தான முகாம்

பாஜக சாா்பில் சத்தியமங்கலத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். 23-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்ப... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புதிய நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

சத்தியமங்கலம் நகராட்சியின் புதிய ஆணையராக சு.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். சத்தியமங்கலம் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த தாமரை, பரமகுடி நகராட்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா். இதையடு... மேலும் பார்க்க

பாண்டியாறு-மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

பாண்டியாறு-மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். பவானிசாகா் அணை பாசன விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி கீழ்பவானி முறைநீா் பாசன விவசா... மேலும் பார்க்க

ஈரோட்டில் நாளை மிதிவண்டி போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் வரும் 27- ஆம் தேதி மிதிவண்டி போட்டியும், 28- ஆம் தேதி மாரத்தான் போட்டியும் நடைபெற உள்ளன. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். அதிமுக எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட... மேலும் பார்க்க

ஈரோடு விஇடி கல்லூரியில் ஸ்டாா்ட்அப் மாநாடு

ஈரோடு திண்டல் விஇடி கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை மேலாண்மைத் துறை ஸ்டாா்ட்அப் மாநாடு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, வேளாளா் கல்வி அறக்கட்டளையின்... மேலும் பார்க்க