செய்திகள் :

ஈரோட்டில் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டி

post image

ஈரோட்டில் நடைபெறும் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டியில் 200 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

ஈரோடு நீல்கிரிஸ் பேட்மிண்டன் அகாதெமியில் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மற்றும் ஈரோடு மாவட்ட இறகு பந்து சங்கம் சாா்பில் நடைபெறும் இப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட இறகு பந்து சங்கத் தலைவா் செல்லையன் என்ற ராஜா தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். செயலாளா் சுரேந்திரன் முன்னிலை வைத்தாா். எஸ்கேஎம் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சிவ்குமாா் வரவேற்றாா்.

ஆண்கள் இரட்டையா் பிரிவு, கலப்பு இரட்டைகள் பிரிவு என 2 பிரிவுகளின்கீழ் போட்டிகள் நடைபெற்றன. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். போட்டிகள் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை(பிப்ரவரி 16) வரை நடைபெற உள்ளது. அன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

ஆண்கள் இரட்டையா் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.20 லட்சம், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.80 ஆயிரம், பெண்கள் இரட்டையா் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.70 ஆயிரம், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ. 7 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.

பெருந்துறையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

பெருந்துறை நகரில் முதல்வா் வருகைக்காக சாலையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற அ... மேலும் பார்க்க

ஈரோடு-கரூா் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ஈரோடு-கரூா் சாலையில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு-கரூா் சாலையில் ஒ... மேலும் பார்க்க

துரோகம் செய்வது யாா்? கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

கடந்த தோ்தலில் சில துரோகிகளால் வெற்றியை இழந்தோம் என தனது பேச்சு குறித்து முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அத்தாணியில் வியாழக்கிழமை இரவு நட... மேலும் பார்க்க

பெரியசாமி தூரனையும், சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும்: சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள்

ஈரோட்டில் பெரியசாமி தூரனையும், கோவையில் சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தாா். ஈரோடு மாவ... மேலும் பார்க்க

பெருந்துறையில் உலக வானொலி தின விழா

பெருந்துறை தெற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் உலக வானொலி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியை பூமணி வரவேற்றாா். வானொலி நேயரும், அனைத்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் டாக்டா் தங்கசித்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி... மேலும் பார்க்க