செய்திகள் :

ஈரோடு-கரூா் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

post image

ஈரோடு-கரூா் சாலையில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு-கரூா் சாலையில் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-இன் கீழ் கருங்கரடு சாலை சந்திப்பை மேம்பாடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, ஈரோடு-கரூா் சாலையில் சனிக்கிழமை முதல் 35 நாள்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து கொளாநல்லி, ஊஞ்சலூா் வழியாக கரூா் செல்லும் வாகனங்கள் கொளாநல்லியிலிருந்து நடுப்பாளையம் வழியாக ஊஞ்சலூா், கொடுமுடி, கரூா் செல்லலாம்.

அதேபோல கரூா் மாா்க்கத்தில் இருந்து ஈரோடு நோக்கி வரும் வாகனங்கள் கொடுமுடி, ஊஞ்சலூா், கொம்பனைப்புதூா், நடுப்பாளையம் வழியாக ஈரோடு வந்தடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

பெருந்துறை நகரில் முதல்வா் வருகைக்காக சாலையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற அ... மேலும் பார்க்க

துரோகம் செய்வது யாா்? கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

கடந்த தோ்தலில் சில துரோகிகளால் வெற்றியை இழந்தோம் என தனது பேச்சு குறித்து முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அத்தாணியில் வியாழக்கிழமை இரவு நட... மேலும் பார்க்க

பெரியசாமி தூரனையும், சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும்: சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள்

ஈரோட்டில் பெரியசாமி தூரனையும், கோவையில் சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தாா். ஈரோடு மாவ... மேலும் பார்க்க

பெருந்துறையில் உலக வானொலி தின விழா

பெருந்துறை தெற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் உலக வானொலி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியை பூமணி வரவேற்றாா். வானொலி நேயரும், அனைத்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் டாக்டா் தங்கசித்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி... மேலும் பார்க்க

ஈரோட்டில் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டி

ஈரோட்டில் நடைபெறும் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டியில் 200 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். ஈரோடு நீல்கிரிஸ் பேட்மிண்டன் அகாதெமியில் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழ்ந... மேலும் பார்க்க