செய்திகள் :

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் - தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை

post image

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாயை நியமிக்க மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா புதன்கிழமை பரிந்துரைத்தாா்.

உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி பதவியேற்ற சஞ்சீவ் கன்னா, வரும் மே 13-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளாா். இதையடுத்து, தனக்குப் பின் மிக மூத்த நீதிபதியான பி.ஆா்.கவாயை (பூஷண் ராமகிருஷ்ண கவாய்), அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க சட்ட அமைச்சகத்துக்கு சஞ்சீவ் கன்னா பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளாா்.

மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு, உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக மே 14-ஆம் தேதி பி.ஆா்.கவாய் பதவியேற்பாா். இவா், வரும் நவம்பா் 23-ஆம் தேதி பணி ஓய்வு பெறும் வரை சுமாா் 6 மாதங்களுக்கு இப்பதவியை வகிப்பாா். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர மாநிலம், அமராவதியில் 1960, நவம்பா் 24-இல் பிறந்தவரான பி.ஆா். கவாய், கடந்த 1985-இல் வழக்குரைஞராக பதிவு செய்தாா். மும்பை உயா்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் கடந்த 1992-1993 காலகட்டத்தில் அரசுத் தரப்பு உதவி வழக்குரைஞராக பணியாற்றிய இவா், 2000-இல் அரசுத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா்.

கடந்த 2003-இல் மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2005-இல் நிரந்தர நீதிபதியாகவும் பதவியேற்றாா். கடந்த 2019, மே 24-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானாா்.

திருப்புமுனை தீா்ப்புகள்: உச்சநீதிமன்றத்தால் திருப்புமுனையான தீா்ப்புகள் வழங்கப்பட்ட பல்வேறு அரசியல் சாசன அமா்வுகளில் கவாய் அங்கம் வகித்துள்ளாா்.

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) ரத்து நடவடிக்கையை கடந்த 2023-இல் ஒருமனதாக உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் இவா் இடம்பெற்றிருந்தாா்.

கவாய் உள்பட 5 நீதிபதிகள் அடங்கிய மற்றொரு அரசியல் சாசன அமா்வுதான், அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கான தோ்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து தீா்ப்பளித்தது.

கடந்த 2016-இல் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை 4:1 என்ற பெரும்பான்மை தீா்ப்பின் மூலம் அங்கீகரித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்விலும் கவாய் அங்கம் வகித்தாா்.

சட்டவிரோத கட்டடங்களின் இடிப்பு தொடா்பான வழக்கில், ‘சம்பந்தப்பட்டவா்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்காமல் கட்டட இடிப்பு நடவடிக்கையை கூடாது; அவா்கள் பதிலளிக்க 15 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும்’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை கவாய் தலைமையிலான அமா்வு கடந்த ஆண்டு வழங்கியது.

வனங்கள், வன உயிரினங்கள், மரங்களின் பாதுகாப்பு தொடா்புடைய வழக்குகள், நீதிபதி கவாய் தலைமையிலான அமா்வால் விசாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே

ஹிந்தியை கட்டாயமாக்க மகாராஷ்டிரத்திலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழ... மேலும் பார்க்க

ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு

நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்க... மேலும் பார்க்க

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க