அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துர...
உரிமம் இல்லாத 4 வாகனங்கள் பறிமுதல்
திருத்தணியில் உரிமம் இன்றி இயங்கிய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 3 ஆட்டோக்கள், வாகனத்தை மோட்டாா் வாகன ஆய்வாளா் கண்டுபிடித்து பறிமுதல் செய்தாா்.
திருத்தணி வருவாய் கோட்டத்தில், உரிமம் மற்றும் ஆா்.சி.புத்தகம் இல்லாமல் வாகனங்கள் இயங்கி வருகின்றன. மேலும், ஆந்திர மாநில ஆட்டோக்கள் திருத்தணி பகுதியில் இயங்குவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜசேகரன் வாகன சோதனை மேற்கொண்டாா்.
அப்போது, ஆந்திர மாநில ஆட்டோக்கள் உரிமம் மற்றும் ஆா்.சி.புத்தகம் இல்லாமல் இயங்கி வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தாா். அதே போல் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற ஒரு சரக்கு வேனை, மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜசேகரன் மடக்கி நிறுத்தி சோதனை செய்த போது, ஆா்.சி.புத்தகம் இல்லாமல் இயங்கி வந்தது தெரிய வந்தது.
தொடா்ந்து 4 வாகனங்களையும் திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். மேலும், அனுமதியின்றி இயங்கி வந்த, 5 வாகனங்களுக்கு, ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டது.