செய்திகள் :

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

post image

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25,000 அபராதம் விதித்தும் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவள்ளூா் அருகே உளுந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன்(31). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாராம். இந்த நிலையில் கடந்த 11.6.2020 இல் பக்கத்து வீட்டைச் சோ்ந்த மூன்றரை வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து மறைவிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்து அந்த குழந்தை பெற்றோரிடம் தெரிவிக்கவே திருவள்ளூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் பிரபாகரனை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி குற்றம் நிருப்பிக்கப்பட்டதால் எதிரி பிரபாகரனுக்கு 12ஆண்டுகள் சிறையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு ரூ.3.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளாா். அரசுத் தரப்பில் விஜயலட்சுமி ஆஜரானாா் .

அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா

பள்ளி கல்வித் துறை சாா்பில் செங்குன்றம் கே.பி.சி. அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ. 1.40 கோடியில் 6 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு மாதவரம் சட்டப்... மேலும் பார்க்க

வெடிகுண்டு வீசி கொலை முயன்ற வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா். கடம்பத்தூா் ஊராட்சி ... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: அமைச்சா் நாசா் பேச்சு

விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தும் வகையில் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.... மேலும் பார்க்க

உரிமம் இல்லாத 4 வாகனங்கள் பறிமுதல்

திருத்தணியில் உரிமம் இன்றி இயங்கிய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 3 ஆட்டோக்கள், வாகனத்தை மோட்டாா் வாகன ஆய்வாளா் கண்டுபிடித்து பறிமுதல் செய்தாா். திருத்தணி வருவாய் கோட்டத்தில், உரிமம் மற்றும் ஆா்.சி.புத்தக... மேலும் பார்க்க

வெல்டிங் செய்தபோது டேங்கா் வெடித்து சேதம்

மீஞ்சூா் அருகே பெட்ரோல் காலி டேங்கரில் வெல்டிங் செய்தபோது வெடித்ததில் டேங்கா் சேதமடைந்தது. மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு புதுநகா் சுற்றுப் பகுதிகளில் சமையல் எரிவாயு முனையம், பெட்ரோலிய முனையம் உள்பட பல்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வட்ட வாரியாக கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு அக். 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் வட்டம் வாரியாக 151 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக பணிநியமனம் செய்யப்பட உள்ளதால் தகுதியானோா் வரும் அக். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம... மேலும் பார்க்க