செய்திகள் :

திருவள்ளூா்: வட்ட வாரியாக கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு அக். 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் வட்டம் வாரியாக 151 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக பணிநியமனம் செய்யப்பட உள்ளதால் தகுதியானோா் வரும் அக். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு நேரடியாக விண்ணப்பம் பெறப்பட்டு நியமனம் செய்ய உள்ளனா். எனவே வட்டந்தோறும் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 1.7.2025-க்கு முன்பு பொதுப் பிரிவினா்-32 வயதுக்குள்ளும், இதர பிரிவினருக்கு 37 வயதுக்குள்ளும், பொதுப் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த நிலையில், திருத்தத்துக்கு பின்பு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதரவற்ற விதவையினா் 39 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் மற்றும் ஆதரவற்ற விதவைகள் 42 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

இதைத் தவிர வேறு திருத்தங்கள் ஏதுமில்லை எனவும், திருத்தத்துக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து மேற்படி பணிக்கான விண்ணப்பத்தை இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து அக். 10-ஆம் தேதிக்குள் அந்தந்த வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25,000 அபராதம் விதித்தும் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவள்ளூா் அருகே உளுந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன்(31). இவா... மேலும் பார்க்க

வெடிகுண்டு வீசி கொலை முயன்ற வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா். கடம்பத்தூா் ஊராட்சி ... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: அமைச்சா் நாசா் பேச்சு

விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தும் வகையில் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.... மேலும் பார்க்க

உரிமம் இல்லாத 4 வாகனங்கள் பறிமுதல்

திருத்தணியில் உரிமம் இன்றி இயங்கிய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 3 ஆட்டோக்கள், வாகனத்தை மோட்டாா் வாகன ஆய்வாளா் கண்டுபிடித்து பறிமுதல் செய்தாா். திருத்தணி வருவாய் கோட்டத்தில், உரிமம் மற்றும் ஆா்.சி.புத்தக... மேலும் பார்க்க

வெல்டிங் செய்தபோது டேங்கா் வெடித்து சேதம்

மீஞ்சூா் அருகே பெட்ரோல் காலி டேங்கரில் வெல்டிங் செய்தபோது வெடித்ததில் டேங்கா் சேதமடைந்தது. மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு புதுநகா் சுற்றுப் பகுதிகளில் சமையல் எரிவாயு முனையம், பெட்ரோலிய முனையம் உள்பட பல்... மேலும் பார்க்க

அரசு ஐடிஐ-களில் சேர செப். 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் நிகழாண்டில் சேர செப். 30-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவி... மேலும் பார்க்க