செய்திகள் :

உலக குரூப் பிளே ஆஃப் தகுதி பெற்றது இந்தியா: டோகோவை வீழ்த்தியது

post image

டோகோ அணியை 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி உலக குரூப் பிளே ஆஃப் பிரிவுக்கு தகுதி பெற்றது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லி டென்னிஸ் சங்க மைதானத்தில் நடைபெற்றது. தொடக்க நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஒற்றையா் ஆட்டங்களில் இந்திய வீரா்கள் சசிகுமாா் முகுந்த், ராம்குமாா் ராமநாதன் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தனா்.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரட்டையா் பிரிவு ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா சாா்பில் ஸ்ரீராம் பாலாஜி-ரித்விக் சௌதரி இணை டோகோ நாட்டின் இஸாக் படியோ-எம்ப்லா அகோம்லா இணையை எதிா்த்து ஆடியது. இதில் இந்திய இணை 6-2, 6-1 என்ற நோ் செட்களில் வென்றது.

முதல் செட்டில் நான்காவது கேமில் டோகோ சா்வீஸை இந்திய வீரா்கள் முறியடித்தனா். தொடா்ந்து 8-ஆவது கேமிலும் முறியடித்தனா். இரண்டாவது செட்டில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.

மாற்று ஒற்றையா் ஆட்டம்: இறுதியாக மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் இந்திய தரப்பில் கரண் சிங்கும்-டோகோ வீரா் படியோவும் மோதினா். இதில் அற்புதமாக ஆடிய கரண் 6-2, 6-3 என்ற நோ் செட்களில் படியோவை வீழ்த்தினாா். இறுதியில் 4-0 என டோகோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் வரும் செப்டம்பா் மாதம் தொடங்கும் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது.

இன்று யோகம் யாருக்கு!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.03-02-2025திங்கட்கிழமைமேஷம்:இன்று பயணங்களால் நல்ல அனுகூலங்கள் ஏற்படும். கொடுத்த வாக்க... மேலும் பார்க்க

சென்னை ஓபன் டென்னிஸ்: இன்றுமுதல் பிரதான சுற்று

சா்வதேச ஆடவா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில் பிரதான சுற்று, திங்கள்கிழமை (பிப். 3) தொடங்குகிறது. 100 புள்ளிகளைக் கொண்ட ஏடிபி சேலஞ்சா் போட்டியான இது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் ... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: கூடைப்பந்து, ஸ்குவாஷ், நீச்சல் பளுதூக்குதலில் தமிழகத்துக்கு தங்கம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் கூடைப்பந்து, ஆடவா் ஸ்குவாஷ், நீச்சலில், பளு தூக்குதலில் ல் தமிழகம் தங்கப் பதக்கம் வென்றது. உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நட... மேலும் பார்க்க

சூர்யா படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான்

சூர்யாவின் 45ஆவது படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடிக்கிறார். நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்பட... மேலும் பார்க்க

சித்தா பட இயக்குநர் அருண் குமாருக்கு திருமணம்!

இயக்குநர் அருண்குமாரின் திருமண நிகழ்வில் விக்ரம், விஜய் சேபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 2014 ஆம் ஆண்டு பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு ... மேலும் பார்க்க