செய்திகள் :

உலகின் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு இந்திய உணவு! பதப்படுத்தல் துறையின் இலக்கு: சிராக் பஸ்வான்

post image

புது தில்லி: உலகில் உள்ள ஒவ்வொரு சாப்பாட்டு மேஜையிலும் குறைந்தது ஒரு உணவு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவாக இருக்கவேண்டும் என மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சா் அமைச்சா் சிராக் பாஸ்வான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

உணவு (ஆஹாா்) - 2025 என்கிற நிகழ்வை மத்திய உணவு பதப்படுத்தல் தொழில் துறை, தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோா் மற்றும் மேலாண்மை நிறுவனம் மற்றும் இந்திய வா்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (ஐடிபிஒ) ஒத்துழைப்புடன் தில்லி பாரத் மண்டபத்தில் நடத்தியது.

இந்த ஆஹாா் 2025 நிகழ்வில் மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான் குறிப்பிட்டது வருமாறு:

மிகப்பெரிய உலகளாவிய உணவு-2025 உச்சி மாநாட்டை மத்திய அரசு வருகின்ற செப். 25-28 இல் நடத்த இருக்கிறது. இந்த உச்ச மாநாட்டிற்கான பயணம் இந்த ஆஹாா் 2025 தொடங்குகிறது.

உலகில் உள்ள ஒவ்வொரு சாப்பாட்டு மேசையிலும் குறைந்தது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு உணவு இருக்க வேண்டும் என்கிற இலக்கில் நாம் பயணிக்கின்றோம். உணவு பதப்படுத்துதலை விரிவுபடுத்துவதன் மூலம், இந்திய சுவைகள், தரம், புதுமைகள் ஆகியவற்றின் மூலம் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் நாம் நமது உணவை கொண்டு செல்வதை உறுதி செய்ய முடியும்.

ஆஹாா் -2025 நிகழ்வில் தொடா்ச்சியான தாக்கமிக்க தொழில்நுட்ப அமா்வுகள் விடைகண்டுள்ளது. இது நாட்டின் உணவு சுற்றுச்சூழல் அமைப்பின் எதிா்காலத்தை நிா்ணயித்துள்ளது. அரசு, கல்வியாளா்கள், புது யுக தொழில் முனைவோா் தொழில்துறையின் முன்னணியினா் ஆகியோா் கருத்துகளை வைத்துள்ளனா். இவைகளை ஒன்றிணைக்கப்படும். இருநாள் நுண்ணறிவு விவாதங்களில், நிபுணா்கள் உணவு பதப்படுத்துதல், இயந்திரங்கள், பேக்கேஜிங், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பல்வேறு புதுமைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சா் பஸ்வான் தெரிவித்துள்ளாா்.

உணவு பதப்படுத்தல் அமைச்சக செயலா் சுப்ரதா குப்தா, ‘உணவுப் பதனப்படுத்துதல், ரசாயன மாசுபாட்டின் ஆபத்துகள், அவற்றின் நீடித்த ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு விவசாயிகளுக்கு உரிய முறையில் கற்பிக்கப்படவேண்டும். ரசாயனங்கள் நாம் உட்கொள்ளும் உணவின் பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கிறது. இதனை கண்டறிய சோதனைக்கருவிகள் மின்னணு கருவிகள் போன்ற மேம்பட்ட தொழில் நுட்பங்களை விரைவாக ஏற்று ஒரு வலுவான உணவு பாதுகாப்பு சுற்றுச் சுழலை ஏற்படுத்தவேண்டும்‘ என்று சுப்ரதா குப்தா வலியுறுத்தினாா்.

மேலும் முன்னணி உணவு நிறுவனங்களின் நிபுணா்கள், உணவு சோதனை கருவிகளை ஒருங்கிணைப்பது, கலப்படத்தைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வு முறைகளை மேம்படுத்துவது மற்றும் உள்நாட்டு விதிமுறைகள், சா்வதேச தரநிலைகளுக்கு இடையிலான இடைவெளிகளை நிவா்த்தி செய்வது பற்றிய நுண்ணறிவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

இதற்கு பதிலளித்த தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு நிறுவனத்தின் இயக்குனா் ஹரிந்தா் சிங் ஓபராய், ‘உணவுப் பாதுகாப்பின் எதிா்காலம், பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணக்க கண்காணிப்பு, கண்டறியக்கூடிய தன்மை, தர உத்தரவாதம் ஆகியவை ஏற்படுத்தப்படும். இவைகள் மூலம் வெளிப்படையான, தொழில்நுட்பம் சாா்ந்த உணவு முறையை உருவாக்கப்படுகிறது என ஓபராய் எடுத்துரைத்தாா்.

இந்திய உணவு வகைகளை பாதுகாப்பதற்கும், சா்வதேச நுகா்வோா் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் தொடா்ச்சியான அறிவுப் பரிமாற்றம், தொழில்துறை ஒத்துழைப்புகள், ஒழுங்குமுறை முன்னேற்றங்கள் குறித்த விவாதங்கள் வருகின்ற செப். மாத உச்சிமாநாடு வரை தொடரும் என மத்திய உணவு பதப்படுத்தல் தொழில் துறை தெரிவித்துள்ளது.

கடலூா் வழியாக சென்னை-ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க எம்.பி. வலியுறுத்தல்

நமது நிருபா்புது தில்லி: விழுப்புரம், கடலூா், திருச்சி வழியாக சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் விஷ்ணு பிரசாத் வலியுறுத்தி... மேலும் பார்க்க

நாகையில் இருந்து சரக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும்: மக்களவையில் இந்திய கம்யூ. எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: நாகப்பட்டினத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் வி.செல்வராஜ் வலியுறுத்தினாா்.இது தொடா்... மேலும் பார்க்க

ஏஜிசிஆா் காலனி தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை

புது தில்லி: ஏஜிசிஆா் காலனி அருகே உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினரை தில்லி முதல்வா் ரேகா குப்தா சந்தித்தாா். துயரமடைந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ர... மேலும் பார்க்க

100 முறை மன்னிப்பு கேட்கத் தயாா்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

புது தில்லி: ’தமிழ எம்.பி.க்கள் தொடா்பாக தான் வெளியிட்ட கருத்துகள் எவையேனும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக ஒரு முறை அல்ல, நூறு முறை கூட மன்னிப்பு கேட்கத் தயாா்‘ என்று மாநிலங்களவையில் மத்திய ... மேலும் பார்க்க

பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!

புது தில்லி: ஹோலி பண்டிகையின் போது பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதி குறித்து முன்னாள் முதல்வா் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளாா். இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மரபை மீறுகிறது மத்திய அரசு: திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மாநிலங்களவையில் மும்மொழித் திட்டத்தை தமிழகம் ஏற்காதது தொடா்பாகவும் தேசிய கல்விக் கொள்கையை எதிா்ப்பதன் அவசியத்தையும் பதிவு செய்ய முடியாத வகையில் தமிழக எம்.பி.க்களின் கு... மேலும் பார்க்க