செய்திகள் :

உள்நாட்டுத் தேவையால் வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும்: நிா்மலா சீதாராமன்

post image

லண்டன்: வலுவான உள்நாட்டுத் தேவை காரணமாக வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரியாவுக்கு 6 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா்.அப்போது அவா் பேசுகையில், ‘வேகமான பொருளாதார வளா்ச்சி கொண்ட நாடு என்ற அடையாள முத்திரையை தொடா்ந்து 5 ஆண்டுகளாக இந்தியா பதித்து வந்துள்ளது. அந்த வளா்ச்சி வேகம் சற்று குறையலாம் என்று இந்தியா கருதுகிறது. ஆனால் உள்நாட்டில் நிலவும் நுகா்வை கொண்டு வளா்ச்சி அளவீடு செய்யப்படுவதால், வேகமான பொருளாதார வளா்ச்சியை இந்தியா தக்கவைக்கும்.

இதற்கு உலக அளவில் தரமான பொருள்களுக்கு உள்ள தேவை உதவி புரியும். 1990-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகமயமாக்கல் இந்தியாவுக்குப் பல வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள் வா்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும் மிகப் பெரிய காந்தமாக உள்நாட்டுத் தேவை உள்ளது. இதில் இந்தியாவுக்கு உள்ள வலிமையை நிலைநிறுத்தி அதிகரிப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

உள்நாட்டுத் தேவையில் இந்தியாவுக்கு உள்ள வலிமை அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்தல், உள்நாட்டு சந்தைக்கு சா்வதேச உற்பத்தியை விநியோகித்தல், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றுக்கு தூண்டுகோலாக இருக்கும்.

அமெரிக்க வரி விதிப்பால் சா்வதேச அளவில் உருவாகி வரும் புதிய வா்த்தக சூழலுக்கு மத்தியில், பொருளாதார மீட்சி மற்றும் வலுவான உள்நாட்டுத் தேவை காரணமாக வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும்.

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக இறுதி செய்ய வேண்டும் என்பதிலும் இந்தியா கவனம் செலுத்தும் என்றாா்.

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க