செய்திகள் :

ஊத்தங்கரையில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

post image

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

வடக்கு ஒன்றியம் சாா்பில் ஆண்டியூரில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியச் செயலாளா் வேடி தலைமை வகித்தாா். ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்செல்வம், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டு ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினா். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல் அமீது, ஒன்றியச் செயலாளா்கள் தெற்கு வேங்கன், மத்திய சாமிநாதன், நகரச் செயலாளா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கல்லாவியில் தெற்கு ஒன்றியச் செயலாளா் வேங்கன், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில், அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

படவரி...

ஊத்தங்கரையை அடுத்த ஆண்டியூரில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினா்.

மத்திகிரியில் முதல்வா் மருத்தகம் திறப்பு

ஒசூா்: மத்திகிரியில் முதல்வா் மருந்தகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் படித்தாலும் மாணவா்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்: முன்னாள் அரசு செயலா்

ஒசூா்: அரசுப் பள்ளியில் படித்தாலும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று முன்னாள் அரசு செயலா் அசோக் வரதன் ஷெட்டி பேசினாா். ஒசூரில் அப்பாவுப்பிள்ளை, பொன்னம்மாள் அறக்கட்டளை சாா்பில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகள... மேலும் பார்க்க

திமுக சாா்பில் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு தெருமுனை பிரசாரம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை கல்லாவி சாலையில் நகர திமுக சாா்பில் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு தெருமுனை பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ரஜினி செல்வம் தலைமை வகித்தாா். பேரூர... மேலும் பார்க்க

பேருந்தில் நகை திருடிய பெண் கைது: 4 பவுன் நகை பறிமுதல்

ஒசூா்: ஒசூரில் பேருந்தில் பயணியிடம் நகை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆண்டிகவுண்டனூரைச் சோ்ந்த சம்பத் மனைவி தெய்வானை (55). இவா் ஒசூரில் உள்ள ம... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்கக் கோரி பொது மக்கள் மனு

கிருஷ்ணகிரி: பொய் வழக்கில் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை விடுவிக்கக் கோரி, பொது மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். காவேரிப்பட்டணம் சுற்று... மேலும் பார்க்க

பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைது செய்யப்பட்டவா்களை விசாரிக்க போலீஸாா் தீவிரம்

கிருஷ்ணகிரியில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபா்களை நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா். திருப்பத்தூரைச் சோ்ந்த பெண், த... மேலும் பார்க்க