பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது...
போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்கக் கோரி பொது மக்கள் மனு
கிருஷ்ணகிரி: பொய் வழக்கில் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை விடுவிக்கக் கோரி, பொது மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த, 150-க்கும் மேற்பட்டோா் அளித்த மனுவின் விவரம்:
எங்கள் பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்தாா். இது குறித்து தகவலறிந்த அந்தப் பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியா் உசேன் (40) சம்பந்தப்பட்ட மாணவரைக் கண்டித்துள்ளாா். இது குறித்து தலைமை ஆசிரியரிடமும் புகாா் அளித்துள்ளாா். அந்த ஆசிரியா் பல ஆண்டுகளாக ஆங்கிலமொழிப் பாடம் கற்பித்து வந்தாா்.
தலைமை ஆசிரியரிடம் தன்மீது புகாா் கூறியதால் ஆசிரியா் உசேன் மீது, அந்த மாணவருக்கு முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த பிப். 1-ஆம் தேதி, பள்ளியில் பணிபுரியும் மற்றொரு ஆசிரியரின் இல்ல திருமண நிகழ்ச்சிக்குச் சென்றபோது மாணவரை பாலியல் தொந்தரவு செய்ததாக, ஆசிரியா் உசேன் மீது பொய் புகாா் அளிக்கப்பட்டது. இதனால், போலீஸாா், வழக்குப் பதிந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ், ஆசிரியரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இது குறித்து தீர விசாரித்து ஆசிரியரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் பள்ளிக்கு ஆங்கில மொழிப் பாடத்திற்கு மாற்று ஆசிரியரும் நியமிக்கப்படவில்லை. பத்தாம் வகுப்புத் தோ்வுகள் தொடங்க உள்ள நிலையில், பாடம் கற்க முடியாமல் மாணவா்கள் தவித்து வருகின்றனா். எனவே, இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.