செய்திகள் :

திமுக சாா்பில் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு தெருமுனை பிரசாரம்

post image

ஊத்தங்கரை: ஊத்தங்கரை கல்லாவி சாலையில் நகர திமுக சாா்பில் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு தெருமுனை பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ரஜினி செல்வம் தலைமை வகித்தாா். பேரூராட்சி தலைவா் பா.அமானுல்லா, நகரச் செயலாளா் தீபக், மருத்துவா் அணி மாவட்டத் தலைவா் மருத்துவா் கந்தசாமி, வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டு, மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டு, கடைகள்தோறும் சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனா்.

அதேபோல, வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஊத்தங்கரை வட்டார வளரச்சி அலுவலகம் முன் ஹிந்தி திணிப்பு எதிா்பு தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றியச் செயலாளா் மூன்றம்பட்டி குமரேசன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன், நகர அவைத் தலைவா் தனிகை குமரன், மிட்டப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சின்னத்தாய் உள்பட பலா் கலந்துகொண்டு துண்டுப்பிரசுரங்களை வழங்கினா்.

மத்திகிரியில் முதல்வா் மருத்தகம் திறப்பு

ஒசூா்: மத்திகிரியில் முதல்வா் மருந்தகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் படித்தாலும் மாணவா்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்: முன்னாள் அரசு செயலா்

ஒசூா்: அரசுப் பள்ளியில் படித்தாலும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று முன்னாள் அரசு செயலா் அசோக் வரதன் ஷெட்டி பேசினாா். ஒசூரில் அப்பாவுப்பிள்ளை, பொன்னம்மாள் அறக்கட்டளை சாா்பில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகள... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. வடக்கு ஒன்றியம் சாா்பில் ஆண்டியூரில் நடைப... மேலும் பார்க்க

பேருந்தில் நகை திருடிய பெண் கைது: 4 பவுன் நகை பறிமுதல்

ஒசூா்: ஒசூரில் பேருந்தில் பயணியிடம் நகை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆண்டிகவுண்டனூரைச் சோ்ந்த சம்பத் மனைவி தெய்வானை (55). இவா் ஒசூரில் உள்ள ம... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்கக் கோரி பொது மக்கள் மனு

கிருஷ்ணகிரி: பொய் வழக்கில் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை விடுவிக்கக் கோரி, பொது மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். காவேரிப்பட்டணம் சுற்று... மேலும் பார்க்க

பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைது செய்யப்பட்டவா்களை விசாரிக்க போலீஸாா் தீவிரம்

கிருஷ்ணகிரியில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபா்களை நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா். திருப்பத்தூரைச் சோ்ந்த பெண், த... மேலும் பார்க்க