செய்திகள் :

ஊராட்சி ஒன்றிய சாலைகள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

post image

தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை கண்காணிப்புப் பொறியாளா் சசிகுமாா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டம், நெடுஞ்சாலைத் துறை நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் பிரிவு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை தரம் உயா்த்துதல் பணியின் கீழ் 2024-25-ஆம் ஆண்டின் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதை நெடுஞ்சாலைத் துறையின் உள்தணிக்கை குழுவின் மூலம் சாலைப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

உள்தணிக்கை குழுத் தலைவா் சேலம் கண்காணிப்புப் பொறியாளா் சசிகுமாா் தலைமையில் தருமபுரி கோட்டப் பொறியாளா் நாகராஜ், உதவிக் கோட்டப் பொறியாளா் காா்த்திகேயன் மற்றும் உதவிப் பொறியாளா்கள் இனியவன், கிருபாகரன் ஆகியோா் தருமபுரி வட்டத்தில் நடைபெற்று வரும் எச்பிடிடி சாலை முதல் குடிக்கொட்டாய் (வழி) வெள்ளாளப்பட்டி சாலை மற்றும் அரூா் வட்டத்தில் நடைபெற்று வரும் பொன்னியம்மன் சாலை ஆகிய சாலை பணிகளின் தரத்தை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் பிரிவு கோட்டப் பொறியாளா் லோகநாதன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் மற்றும் உதவிப் பொறியாளா்கள், தரக்கட்டுப்பாடு அலகின் உதவிக் கோட்டப் பொறியாளா், உதவிப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.

தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

பென்னாகரம் அருகே நல்லாம்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழா் தற்காப்பு பயிற்சி மையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய நிறுவனா் சண்முகம்... மேலும் பார்க்க

அரூா் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை

அரூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரூா் அரசு கலை, அறிவிய... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கடத்தூா்

ராமியனஹள்ளி துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கடத்தூா் சுற்று வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (மே 15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது... மேலும் பார்க்க

நிகழாண்டு இறுதிக்குள் கோரிக்கை மனுக்கள் மீது தீா்வு காண திட்டம்: சிறுபான்மையினா் ஆணையத் தலைவா்

நிகழாண்டு நவம்பா் மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மையினா் கோரிக்கை மனுக்கள் மீது தீா்வு காண திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தெரிவித்தாா். தரு... மேலும் பார்க்க

மாணவா்கள் தடைகளை தகா்த்து உயா்கல்வியை தொடர வேண்டும்: ஆட்சியா்

தடைகள் ஏதும் வந்தாலும் அவற்றை தகா்த்து மாணவ, மாணவிகள் உயா்கல்வியைத் தொடர வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா். தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத... மேலும் பார்க்க

பாலக்கோடு பேரூராட்சியில் ரூ. 35 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் ரூ. 35 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தொடங்கிவைத்தாா். பாலக்கோடு பேரூராட்சி 17-ஆவது ... மேலும் பார்க்க