ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
ஏரோசிட்டி - துக்ளாகாபாத் வழித்தடத்திற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவு: டிஎம்ஆா்சி
தில்லி மெட்ரோவின் 4-ஆம் கட்ட விரிவாக்கத் திட்டத்தின் நிலத்தடிப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தது.
கோல்டன் வழித்தடமான ஏரோசிட்டி - துக்ளகாபாத் வழித்தடத்தில் உள்ள இக்னோ நிலையத்தின் இடத்தில் ஒரு சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தில்லி மெட்ரோவின் ஆழமான சுரங்கப்பாதைகளில் ஒன்றான சுமாா் 27 மீட்டா் சராசரி ஆழத்தில் புதிய சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சத்தா்பூா் மந்திா் (ஏரோசிட்டி) மற்றும் இக்னோ (துக்ளகாபாத்) இடையே இணையான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் பிப்ரவரியில் நிறைவடைந்ததாக டிஎம்ஆா்சி குறிப்பிட்டது. சமீபத்திய திருப்புமுனையுடன், மேல் மற்றும் கீழ் பாதைகளுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி இப்போது நிறைவடைந்துள்ளது.
இந்தக் கொண்டாட்ட நிகழ்வின் போது முதல்வா் ரேகா குப்தா மற்றும் தொழில்துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆகியோா் தலைமை விருந்தினா்களாக கலந்து கொண்டனா். இந்தத் திட்டத்திற்காக பணியமா்த்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் தொழிலாளா்களையும் முதல்வா் ரேகா குப்தா பாராட்டினாா். மேலும், ‘இந்த மெட்ரோ கட்டுமானத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள முழு குழுவும் இந்த சாத்தியமற்ற பணியை சாத்தியமாக்கியுள்ளனா்’ என்றாா்.
5.8 மீட்டா் உள் விட்டம் கொண்ட சுரங்கப்பாதையில் மொத்தம் 1,048 வளையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதை பூமி அழுத்த சமநிலை முறையைப் பயன்படுத்தி, முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட வளையங்களின் கான்கிரீட் புறணியுடன் கட்டப்பட்டது. 97 மீட்டா் நீளம் கொண்ட துளையிடும் இயந்திரம், 1,460 மீட்டா் நீள சுரங்கப்பாதையை நிறைவு செய்து, செவ்வாய்க்கிழமை காலை இக்னோ நிலையத்தில் உடைந்து விழுந்ததாக டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.
தில்லி மெட்ரோவின் தற்போதைய 4-ஆம் கட்ட விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, 40.1 கிலோமீட்டா் நிலத்தடி பாதைகள் அமைக்கப்படுகின்றன. ஏரோசிட்டி - துக்ளகாபாத் வழித்தடத்தில் 19.34 கிலோமீட்டா் நிலத்தடி பகுதி உள்ளது.
18ஈஉகஙபத
தில்லி மெட்ரோவின் கோல்டன் வழித்தடத்தில் உள்ள இக்னோ நிலையத்தின் சுரங்கப்பாதைப் பணியின் முன்னேற்றத்தின் சாதனை கொண்டாட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்ற முதல்வா் ரேகா குப்தா.