செய்திகள் :

ஒடிசாவில் மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!

post image

ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஒடிசாவின் வடமேற்கு மாவட்டங்களில் நார்வெஸ்டர் என்றழைக்கப்படும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கோடைக்கால மழை பெய்து வருவதாகக் கூறப்படுகிறது.

கோராபுட் மாவட்டத்திலுள்ள பரிடிகுடா கிராமத்திலுள்ள ஒரு குடிசையின் மீது நேற்று (மே 16) மதியம் மின்னல் பாய்ந்துள்ளது. இதில், மழைக்காக அந்தக் குடிசையின் கீழ் ஒதுங்கியிருந்த மூதாட்டி, அவரது பேத்தி உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், அந்த மூதாட்டியின் கணவர் உள்பட 5 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோராபுட்டின் செமிலிகுடா பகுதியில் ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தாசா ஜனி (வயது 32) என்ற நபரும் மின்னல் பாய்ந்து சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளார். இந்தச் சம்பவத்தில் அவரது உறவினர்களான சைதியாராம் மஜ்ஹி மற்றும் லலிதா மஜ்ஹி படுகாயமடைந்தனர்.

உடனடியாக அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே லலிதா மஜ்ஹி பலியான நிலையில் சைத்தியாராம் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

ஜாஜ்பூர் மாவட்டத்தின், புடுசாஹி கிராமத்தில் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் நேற்று (மே 16) மாலை மின்னல் பாய்ந்ததில் பலியாகியுள்ளனர்.

இத்துடன், கஜபதி மாவட்டத்தில் தமயந்தி மண்டல் என்ற பெண் மின்னல் பாய்ந்து பலியாகியுள்ளார். இந்தச் சம்பவத்தில் மேலும் 4 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கஞ்சம் மாவட்டத்தில் 2 பேரும், தேன்கனாலில் ஒருவர் மின்னல் பாய்ந்ததில் பலியாகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மின்னல் பாய்ந்ததில் ஒடிசாவில் சுமார் 1,075 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நிதி ஆயோக் கூட்டத்தில் மமதா பங்கேற்பாரா?

ஜம்மு-காஷ்மீரில் காடுகளை சுற்றி வளைத்து பயங்கரவாத தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரில் காடுகளைச் சுற்றி வளைத்து 3 பயங்கரவாத சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவு மூன... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத் தம்பதி கைது!

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய வங்கதேசத் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். துர்க் மாவட்டத்தின் சிறப்பு அதிரடி படை காவல் துறையினர், அங்கு சட்டவிரோதமாக குடியேறி வசித்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணா மாணவர் கைது

இந்தியாவில் உளவு பார்த்து, மிகவும் முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக, ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்தில் நடந்திருக்கும் இரண்டாவது கைது சம்பவமாக இது உள்ளது. மேலும் பார்க்க

குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி மின்சாரம் பாய்ந்து பலி!

உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகளை விரட்டிச் சென்ற காவல் அதிகாரி ஒருவர் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளார். பிஜ்னோர் மாவட்டத்தில் நாகினா சாலையில் நேற்று (மே 16) இரவு லார் ஓட்டுநர் ஒருவரை அடையாளம் தெரிய... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!

ஆபரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லாத நிலையில் மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கட... மேலும் பார்க்க

புணேவில் அதிரடி.. ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பங்களாக்கள் இடிப்பு!

புணே மாவட்டத்தின் பிம்ப்ரி சின்ச்வாடு புறநகர்ப் பகுதியில் உள்ள இந்திரயானி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 36 பங்களாக்களை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை இடிக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர்... மேலும் பார்க்க