செய்திகள் :

புணேவில் அதிரடி.. ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பங்களாக்கள் இடிப்பு!

post image

புணே மாவட்டத்தின் பிம்ப்ரி சின்ச்வாடு புறநகர்ப் பகுதியில் உள்ள இந்திரயானி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 36 பங்களாக்களை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை இடிக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவிட்டதன்பேரில், சட்டவிரோத கட்டப்பட்ட சுமார் 36 பங்களாங்களை இடிக்கும் பணிகளை பிம்ப்ரி சின்ச்வாடு நகராட்சியின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதற்காக இன்று காலையில் சிகாலி கிராமத்தில் உள்ள இடத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, பங்களாக்களின் உரிமையாளர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் மே 4 அன்று அவர்களின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, இடிக்க உத்தரவிட்டது.

நகராட்சி ஆணையர், குடிமை அமைப்பு விரைவில் சுற்றுச்சூழல் சேத இழப்பீடாகப் பங்களா உரிமையாளர்களிடமிருந்து ரூ. 5 கோடி வசூலிக்கும் என்றும் கூறினார்.

ஆற்றங்கரையோர பகுதியில் சட்டவிரோதமாக பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது!

தெலங்கானா மாநிலத்தில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை முன்னிட்டு, ஹைதரபாத்திலுள்ள அம்மாநில அரசின் தலைமைச் செயலகம் அருகில் இஸ்ரேல் நாட்டின... மேலும் பார்க்க

கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறு கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் சனிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தால் 'சஞ்சீவனி' எனும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இயக்கப்பட... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு! அமைச்சரவை ஒப்புதல்!

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு அமைக்கப்படவுள்ளது.உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவையில் அம்மாநிலத்திலுள்ள சார் தாம் மற்றும் ஆதி கைலாஷ்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் காடுகளை சுற்றி வளைத்து பயங்கரவாத தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரில் காடுகளைச் சுற்றி வளைத்து 3 பயங்கரவாத சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவு மூன... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத் தம்பதி கைது!

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய வங்கதேசத் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். துர்க் மாவட்டத்தின் சிறப்பு அதிரடி படை காவல் துறையினர், அங்கு சட்டவிரோதமாக குடியேறி வசித்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணா மாணவர் கைது

இந்தியாவில் உளவு பார்த்து, மிகவும் முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக, ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்தில் நடந்திருக்கும் இரண்டாவது கைது சம்பவமாக இது உள்ளது. மேலும் பார்க்க