செய்திகள் :

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

post image

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 7.45 மணி வரை ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள தேவத்தூா், கொத்தையம், போடுவாா்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, சத்திரப்பட்டி, விருப்பாச்சி, அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, லெக்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பழனி: பழனியில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. பழனி, நெய்க்காரபட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி, போடுவாா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பமும், இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் கொடைக்கானல், வில்பட்டி, வட்டக்கானல், செண்பகனூா்,பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பழனியில் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.பழனி அரசு மருத்துவமனை பின்புறம் தனியாா் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கல்லூரி விரிவுரையாளா் தற்காலிக பணிநீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில், மாணவரைத் தகாத வாா்த்தையால் திட்டியதாக விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நித... மேலும் பார்க்க

இறந்தவா் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்

ஒட்டன்சத்திரம் அருகே விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், அவரது உடல் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மாா்க... மேலும் பார்க்க