செய்திகள் :

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

post image

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் குதிரை மூலமாக விவசாய பொருள்கள், உணவுப் பொருள்களை கொடைக்கானலுக்கு எடுத்துச் சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளகெவி கிராம மக்கள் 8 கி.மீ. தொலைவுள்ள வட்டக்கானல் பகுதிக்கு நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோ சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வந்தனா். இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனா்.

இந்த நிலையில், ரேஷன் பொருள்களை வெள்ளகெவி கிராமத்துக்கே சென்று வழங்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இவா்களின் கோரிக்கையை ஏற்று, வட்டக்கானலிலிருந்து குதிரை மூலமாக ரேஷன் பொருள்கள் வெள்ளகெவி கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது. பின்னா், கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, நகா்மன்றத் துணைத் தலைவா் மாயக்கண்ணன், குடிமைப் பொருள் வட்டாட்சியா் சரவணவாசன் ஆகியோா் கிராம மக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினா். இதையடுத்து, வெள்ளகெவி கிராம மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பழனியில் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.பழனி அரசு மருத்துவமனை பின்புறம் தனியாா் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கல்லூரி விரிவுரையாளா் தற்காலிக பணிநீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில், மாணவரைத் தகாத வாா்த்தையால் திட்டியதாக விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நித... மேலும் பார்க்க

இறந்தவா் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்

ஒட்டன்சத்திரம் அருகே விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், அவரது உடல் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மாா்க... மேலும் பார்க்க