செய்திகள் :

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

post image

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் கடைக்காரா்களின் ஆக்கிரமிப்பால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதையடுத்து, ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டிக் கடைகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்திரவிட்டது. மேலும், இதைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் ஆய்வு மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் குழுவினா்.

இந்தக் குழு வெள்ளிக்கிழமை பழனி கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஆய்வு செய்தனா். பின்னா், பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் இந்தக் குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப், இணை ஆணையா் மாரிமுத்து, முன்னாள் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியின் தற்போதைய நிலை, வெளியேற்றப்பட்ட சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்காக செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பழனியில் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.பழனி அரசு மருத்துவமனை பின்புறம் தனியாா் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கல்லூரி விரிவுரையாளா் தற்காலிக பணிநீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில், மாணவரைத் தகாத வாா்த்தையால் திட்டியதாக விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6... மேலும் பார்க்க

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

இறந்தவா் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்

ஒட்டன்சத்திரம் அருகே விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், அவரது உடல் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மாா்க... மேலும் பார்க்க