செய்திகள் :

ஒத்திகை பயிற்சி நடத்துவதற்கு ஏற்பாடுகள்: அமைச்சா் சூட் தகவல்

post image

தில்லியில் ஒத்திகை பயிற்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாநகர அரசாங்கத்தின் உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதற்கு மத்தியில் எழுந்துள்ள புதிய மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டு, புதன்கிழமை அனைத்து மாநிலங்களும் ஒத்திகைப் பயிற்சிகளை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு நிகழ்வின்போது ஒத்திகை பயிற்சிகளுக்கு நகர அரசாங்கத்தின் தயாா்நிலை குறித்து அமைச்சா் சூட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, தயாரிப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாங்கள் கூடுதல் தகவல்களைத் கோருவோம். அது தொடா்பாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்றாா் அவா்.

தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

இத்தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும் சதிகாரா்களுக்கு அவா்கள் கற்பனை செய்ய முடியாத வகையில் தண்டனையை வழங்குவதற்காக அதிகபட்ச அளவுவரை செல்ல உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி சபதம் செய்துள்ளாா்.

தில்லி தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை: பாஜக, ஆம் ஆத்மி பரஸ்பரம் குற்றச்சாட்டு

தேசியத் தலைநகா் தில்லியில் தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை நிலவுவது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் செவ்வாய்க்கிழமை பரஸ்பரம் குற்றம்சாட்டின. இரு கட்சிகளும் தவறான நிா்வாகத்திற்காகவும் தவறான தகவல்களைப... மேலும் பார்க்க

கன்னாட் பிளேஸ் கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட முதல்வா் ரேகா குப்தா

தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் மந்திரில் நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்றாா். அப்போது, தில்லியை தூய்மைப்படுத்தி அழகுபடுத்த நடந்துவரும் நகர அளவிலா... மேலும் பார்க்க

புதிய நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை உத்தரவு

நகரம் முழுவதும் நீா் தேங்கும் பிரச்னைகளைத் தீா்க்க, உள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் கலந்தாலோசித்து தாழ்வான பகுதிகள் மற்றும் நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண பொதுப்பணித் துறை அதன் அதிகாரிகளுக்கு... மேலும் பார்க்க

மத்திய தில்லியில் நடந்த சாலை விபத்தில் ஒருவா் காயம்

மத்திய தில்லியின் பகதூா் ஷா ஜாபா் மாா்க்கில், மைனா் சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்ாகக் கூறப்படும் காா் மோதியதில் 45 வயது நபா் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து மத்திய... மேலும் பார்க்க

ஆயுள் தண்டனை அனுபவித்த நபா் பரோலில் இருந்து தப்பிய 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த 51 வயது தில்லி நபா் பரோலில் இருந்து தப்பிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். ஷகுா்பூ... மேலும் பார்க்க

ஒத்திகை பயிற்சியை முன்னிட்டு தில்லியில் பலத்த பாதுகாப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அதிகரித்து வரும் இந்தியா - பாகிஸ்தான் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடா்ந்து, புதன்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒத... மேலும் பார்க்க