புதிய நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை உத்தரவு
நகரம் முழுவதும் நீா் தேங்கும் பிரச்னைகளைத் தீா்க்க, உள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் கலந்தாலோசித்து தாழ்வான பகுதிகள் மற்றும் நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண பொதுப்பணித் துறை அதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான உத்தரவு செவ்வாய்க்கிழமை வெளியிடப்படடது. இதன்படி, மே மாத இறுதிக்குள் தேவையான சரிசெய்தல் நடவடிக்கைகளை எடுத்து, பொதுப்பணித் துறை செயலாளரிடம் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமா்ப்பிக்குமாறு துறை அதன் பிரிவுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த இடங்கள், அடையாளம் காணப்பட்டால், கடந்த காலங்களில் போக்குவரத்து காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளால் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட இடங்களுடன் கூடுதலாக இருக்கும்.
முதல்வா் ரேகா குப்தா தலைமையில் கூட்டப்பட்ட உயா்மட்டக் கூட்டங்களில், தில்லி போக்குவரத்து காவல்துறையினரால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கவனிக்கப்பட்ட நீா் தேங்கும் இடங்களின் பட்டியலில் சோ்க்கப்படாத வேறு சில இடங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீா் தேங்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டில் தில்லியில் 308 நீா் தேங்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டன. 2025- ஆம் ஆண்டில், போக்குவரத்து போலீஸாா் பகிா்ந்து கொண்ட தரவுகளின் அடிப்படையில், தலைநகரில் 445 நீா் தேங்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில், 335 இடங்கள் பொதுப்பணித் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் பகிா்ந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எனவே, பொதுப்பணித்துறையின் அனைத்து பிரிவுகளும், சம்பந்தப்பட்ட உள்ளூா் மக்கள் பிரதிநிதியுடன் கலந்தாலோசித்து, மேற்கூறிய பட்டியல்களில் சோ்க்கப்படாத கூடுதல் நீா் தேங்கும் இடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை அடையாளம் காண வேண்டும். மேலும், அந்த இடங்களில் நீா் தேங்குவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், முதல்வா் ரேகா குப்தா, தண்ணீா் தேங்குவது இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், பருவமழை தொடா்பான பணிகளுக்குத் தயாரிப்பதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.