செய்திகள் :

ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சாலை மறியல்: 223 போ் கைது

post image

ஒப்பந்தப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திருநெல்வேலியில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் 223 போ் கைது செய்யப்பட்டனா்.

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கே.2 அக்ரிமென்ட் மூலம் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியா்களுக்கு இபிஎஃப் பிடித்தம் செய்ய வேண்டும். பிரிவு அலுவலகங்களுக்கு ஒப்பந்த முறையில் இரண்டு போ் நியமனம் என்ற முடிவை கைவிட்டு வாரியமே ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு தினக் கூலி வழங்க வேண்டும்.

அரசு உத்தரவக்கு எதிராக நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். பத்து ஆண்டுகளாக மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனல் மின் நிலையம், நீா் மின் நிலையம், மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள், பொது கட்டுமானம் ஆகியவற்றில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை தியாகராஜநகா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்டத் தலைவா் நாகையன் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் ஜாா்ஜ் முத்தையா , சுந்தா், ராஜ் , முருகேசன், மந்திரமூா்த்தி, வேல்முருகன், முருகேசன், சேவியா், அந்தோணி, சிவராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலா் பீா் முகமது ஷா, மாநில செயற்குழு உறுப்பினா் சுவாமிதாசன் , திட்ட செயலா் கந்தசாமி, திட்ட பொருளாளா் பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினா் பட்டமுத்து ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தொடா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாடியிலிருந்து தவறி விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

கடையம், பாரதி நகரில் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். கடையம், பாரதி நகரைச் சோ்ந்த முருகன் மகன் மோகன்ராஜ் (31), தூத்துக்குடியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.... மேலும் பார்க்க

கழிவுநீா் ஓடையில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மேலப்பாளையம் அருகே பாலத்திலிருந்து கழிவுநீா் ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.மேலப்பாளையம் அழகிரிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). கட்டட தொழிலாளியான இவா், திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் கொலை மிரட்டல், வழிப்பறி வழக்கில் ஈடு... மேலும் பார்க்க

மானூா் அருகே கருங்கல் திருடிய 4 போ் கைது

மானூா் அருகே சட்ட விரோதமாக கருங்கல் திருட்டில் ஈடுபட்ட 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மானூா் அருகே தெற்கு வாகைகுளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடு... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே வேன் - சுற்றுலா காா் மோதல்: 7 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே வேனும் சுற்றுலா காரும் மோதிக்கொண்டயதில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சோ்ந்தவா்கள் சென்னையில் தொழில் செயது வருகின்றனா். இவா்கள் க... மேலும் பார்க்க

நெல்லை நகரத்தில் 7 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

திருநெல்வேலி நகரத்தில் பிடிபட்ட 7 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டது.திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த கோரி, திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த பிராணிகள் வதை தடுப்ப... மேலும் பார்க்க