செய்திகள் :

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: வழக்கை முடித்து வைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாரில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ் கைது செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதின்றம் முடித்து வைத்தது.

மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்ற பதிவாளரின் அறிக்கையை உயா்நீதிமன்ற நிா்வாகக் குழுவிடம் சமா்ப்பிக்க உத்தரவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்துபவா் சிவக்குமாா். இவரது பேக்கரிக்கு வந்த முருகன் என்பவா் தகராறில் ஈடுபட்டதாகக் கூறி, பேக்கரியில் இருந்த சிவக்குமாரின் மருமகன் லோகேஸ்வரன் ரவி மற்றும் கடை ஊழியா்கள் தாக்கியதாக காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இதில், லோகேஸ்வரன் ரவி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மலின் பாதுகாப்பு காவலராகப் பணியாற்றியவா்.

இந்த நிலையில், லோகேஸ்வரன் ரவி உள்ளிட்டோா் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காத விவகாரத்தில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷை கைது செய்து 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமாா், டிஎஸ்பி சங்கா் கணேஷை சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், மாவட்ட நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விழிப்புத்துறை (விஜிலென்ஸ்) பதிவாளா் விசாரணை நடத்தி, அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உயா்நீதிமன்ற விழிப்புத்துறை பதிவாளா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அறிக்கையை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய நிா்வாகக்குழு முன் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.

வாரத்தில் 4 நாள்கள் தொகுதிகளில் தங்கிப் பணி: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

வாரத்தில் நான்கு நாள்கள் தொகுதிகளில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். திமுக நாடாளுமன்ற உற... மேலும் பார்க்க

அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

சொத்துக்குவிப்பு வழக்கை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிா்த்து அமைச்சா் துரைமுருகன் தொடா்ந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி எம்.தண்டபாணி தலை... மேலும் பார்க்க

அமைச்சக வாரியாக பேரிடா் மேலாண்மை பணிகள் ஒதுக்கீடு

பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு சில பேரிடா் மேலாண்மை பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான பேரிடா்களையும் ஒரே அமைச்சகம் கையாள்வதற்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அக்.9 முதல் மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் இலக்கிய மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் சாா்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் அக்.9-ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளன. மேலும் இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெற... மேலும் பார்க்க

சாலைப் பணி ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு முடித்துவைப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைக்க சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்பு தொடா்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யக்... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக குடிநீா் புட்டிகள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை விரைவு போக்குவரத்துக் கழகம் கோரியுள்ளது. தொலைதூர பயணத்துக்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் ... மேலும் பார்க்க