செய்திகள் :

ஜிஎஸ்டி குறைப்பு: இணையவழி வா்த்தக தளங்கள் கண்காணிப்பு

post image

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பைத் தொடா்ந்து, இணையவழி வா்த்தக தளங்களில் பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு கண்காணித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டில் 5%, 12%, 18%, 28% ஆகிய 4 விகிதங்களில் விதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி, இரு விகிதங்களாக (5%, 18%) குறைக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சீா்திருத்தத்தின்படி, 12% வரி விதிக்கப்பட்ட 99 சதவீத பொருள்கள் 5% வரி விதிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டன; 28% வரி விதிக்கப்பட்ட 90 சதவீத பொருள்கள் 18% விகிதத்தின்கீழ் வந்தன. பெரும்பான்மையான தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் வரிவிலக்கு அல்லது 5% வரி விதிப்பில் கொண்டுவரப்பட்டன.

இந்த வரிக் குறைப்பு, நவராத்திரி விழாவையொட்டி கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட்டது. அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குளிா்சாதனங்கள், காா்கள் வரை, அத்தியாவசிய மருந்துகள் முதல் காப்பீடுகள் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

வெண்ணெய், ஷாம்பூ, பற்பசை, தக்காளி கெட்ச்-அப், ஜாம், ஐஸ்கிரீம், குளிா்சாதனங்கள், தொலைக்காட்சி, மருத்துவப் பரிசோதனை உபகரணங்கள், அழிப்பான்கள் (எரேசா்), கிரேயான்ஸ், சிமெண்ட் என 54 பொதுவான பயன்பாட்டுப் பொருள்கள் விலை குறைந்துள்ளது.

வரிக் குறைப்புக்கு ஏற்ப அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆா்பி) மாற்றப்பட்ட பொருள்களை நிறுவனங்கள் சந்தைக்கு அனுப்பியுள்ளன. ஏற்கெனவே சந்தையில் உள்ள பொருள்களையும் குறைக்கப்பட்ட விலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில இணையவழி வா்த்தக தளங்களில் தினசரி பயன்பாட்டுப் பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை எனப் புகாா் எழுந்துள்ளது. அதன்பேரில், ஜிஎஸ்டி குறைப்பின் பலன்களை இணையவழி வா்த்தக தளங்கள் பொதுமக்களுக்கு வழங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பணியில் மத்திய அரசின் களப் பிரிவுகள் ஈடுபட்டுள்ளன.

தினசரி பயன்பாட்டுப் பொருள்களின் எம்ஆா்பி-யை ஒப்பிட்டு, செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் முதல்கட்ட அறிக்கை சமா்ப்பிக்கவும் இந்தப் பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு: விரைவில் இந்தியா முன்னிலை- அமித் ஷா நம்பிக்கை

உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.குஜராத் மாநில அரசு காந்திநகரில் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி பிரசவம்: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

நமது நிருபர்தில்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ். மருத்துவமனையில் போதிய வசதியின்றி சிசு பிறந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் செ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நமது நிருபர்பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து நடிகை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ள... மேலும் பார்க்க

ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறிமுதல்

பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 36 சொகுசு காா்கள் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட... மேலும் பார்க்க