செய்திகள் :

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

post image

நமது நிருபர்

தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், வரம்பு மீறி மணல் அள்ளி விற்பனை செய்து, அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சட்ட விரோதமாக பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, பல்வேறு மணல் குவாரி அதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை கடந்த 2023-ஆம் ஆண்டு சோதனை நடத்தி, சொத்துகளை முடக்கி வழக்குப் பதிந்தது. மேலும், மணல் குவாரி விவகாரத்தில் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சில அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. அந்த அழைப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதன்படி அந்த மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

இதனிடையே, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தில் சுரங்க விவகாரங்கள் சேர்க்கப்படாத நிலையில், மணல் குவாரி அதிபர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குத் தொடர்ந்தது சட்டவிரோதம் என்றும், மணல் குவாரிகள் அமலாக்கத் துறையின் விசாரணை வரம்புக்குள் வராது என்றும் கூறி கோவிந்தராஜ் என்பவர் உள்ளிட்ட பல மணல் குவாரி அதிபர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 16.07.2024-இல் வழங்கிய தீர்ப்பில், மணல் குவாரிகள் அமலாக்கத் துறை விசாரணை வரம்புக்குள் வராது எனத் தெரிவித்து, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் அமலாக்கத் துறைக்குத் தடை விதித்து, சொத்துகள் முடக்கத்தை நீக்கி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை 13.09.2024-இல் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபாங்கர் தாத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரத்தில் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட்டு எந்தவித உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. அதற்கான அவசியம் மற்றும் முகாந்திரம் இந்த வழக்கில் கிடையாது. எனவே, மணல் குவாரிகள் தொடர்பாக அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும், அதேபோல, இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்கள் அனைத்தையும் முடித்து வைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு: விரைவில் இந்தியா முன்னிலை- அமித் ஷா நம்பிக்கை

உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.குஜராத் மாநில அரசு காந்திநகரில் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி பிரசவம்: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

நமது நிருபர்தில்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ். மருத்துவமனையில் போதிய வசதியின்றி சிசு பிறந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நமது நிருபர்பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து நடிகை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ள... மேலும் பார்க்க

ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறிமுதல்

பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 36 சொகுசு காா்கள் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட... மேலும் பார்க்க

ஹரியாணா அமைச்சா் இல்ல பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா் சடலமாக மீட்பு

ஹரியாணா அமைச்சரின் குருகிராம் இல்லத்தில் உள்ள பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்த காவலா் ஜக்பீா் சிங் (... மேலும் பார்க்க