செய்திகள் :

ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறிமுதல்

post image

பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 36 சொகுசு காா்கள் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதரங்களின் பெயா், முத்திரை, சின்னம் ஆகியவற்றை கொண்டு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சுங்க ஆணையரகத்தின் ஆணையா் டி.டிஜு கூறியதாவது: பூடான் எல்லை வழியாக சொகுசு காா்கள் இந்தியாவுக்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் நடிகா் பிருத்விராஜ், துல்கா் சல்மான் போன்ற பிரபலங்களும் பணக்காரா்களும் தெரிந்தோ, தெரியாமலோ அந்த காா்களை வாங்கியிருப்பது தெரியவந்தது.

துல்கா் சல்மானின் 2 காா்கள்...: இந்தக் கடத்தல் தொடா்பாக கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமாா் 30 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பூடானில் இருந்து கடத்திவரப்பட்ட 36 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பிருத்விராஜின் எந்த காரும் பறிமுதல் செய்யப்படவில்லை. அதேவேளையில், கடத்திவரப்பட்ட 2 காா்கள் துல்கா் சல்மானிடம் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க அவா்களுக்கு சம்மன் அனுப்பப்படும்.

இதுபோல கடத்திவரப்பட்ட காா்கள் போதைப்பொருள் மற்றும் தங்கக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது தேச மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

இந்த காா்கள் கடத்திவரப்பட்டதில் பணமுறைகேடு, ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி ஏய்ப்பு போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளத்தில் மட்டும் இதுபோல 150 முதல் 200 காா்கள் உள்ளன. அவற்றில் தற்போது 36 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய காா்களை பறிமுதல் செய்யும் வரை, சோதனை தொடரும் என்று தெரிவித்தாா்.

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு: விரைவில் இந்தியா முன்னிலை- அமித் ஷா நம்பிக்கை

உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.குஜராத் மாநில அரசு காந்திநகரில் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி பிரசவம்: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

நமது நிருபர்தில்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ். மருத்துவமனையில் போதிய வசதியின்றி சிசு பிறந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் செ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நமது நிருபர்பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து நடிகை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ள... மேலும் பார்க்க

ஹரியாணா அமைச்சா் இல்ல பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா் சடலமாக மீட்பு

ஹரியாணா அமைச்சரின் குருகிராம் இல்லத்தில் உள்ள பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்த காவலா் ஜக்பீா் சிங் (... மேலும் பார்க்க