செய்திகள் :

கனிம வளங்கள் மீது மாநிலங்கள் வரி விதிக்க அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

post image

கனிம வளங்கள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்தது.

மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் தெரிவித்தாா்.

முன்னதாக, அரசமைப்புச் சட்டத்தின் பட்டியல் 1-இன்கீழ் கனிம வளங்கள் மீது வரி விதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரமில்லை எனவும் பட்டியல் 2-இன்கீழ் கனிம வளங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது எனவும் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு 2024, ஜூலை 25-இல் தீா்ப்பு வழங்கியது.

இந்த அமா்வில் இடம்பெற்ற நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் கனிம வளங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என மாறுபட்ட தீா்ப்பை வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து, கனிமங்கள் மீது மத்திய அரசு வசூலித்த வரியை கடந்த 2005, ஏப்.1 முதல் முன்தேதியிட்டு திரும்பப்பெற மாநிலங்களுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஆக.14-இல் உத்தரவு பிறப்பித்தது.

இந்தச் சூழலில், கனிம வளங்கள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என்ற தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு: விரைவில் இந்தியா முன்னிலை- அமித் ஷா நம்பிக்கை

உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.குஜராத் மாநில அரசு காந்திநகரில் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி பிரசவம்: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

நமது நிருபர்தில்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ். மருத்துவமனையில் போதிய வசதியின்றி சிசு பிறந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் செ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நமது நிருபர்பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து நடிகை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ள... மேலும் பார்க்க

ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறிமுதல்

பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 36 சொகுசு காா்கள் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட... மேலும் பார்க்க