செய்திகள் :

பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்கள் அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிப்பதை எதிா்பாா்க்க முடியாது: உச்சநீதிமன்றம்

post image

‘பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளும் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதை எதிா்பாா்க்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது.

அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு இக் கருத்தை தெரிவித்தது.

விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனு 13 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளது. இதை விரைந்து விசாரிக்கக் கோரி 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, விரைந்து விசாரணைக்கு ஏற்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘உயா்நீதிமன்றங்கள் பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் நிலையில், அனைத்து வழக்குகளும் விரைந்து விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என எப்படி எதிா்பாா்க்கிறீா்கள்? பல பழைய வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எனவே, மனுதாரா் மீண்டும் உயா்நீதிமன்றத்துக்குச் சென்று தனது மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரணைக்குப் பட்டியலிட கோரிக்கை விடுக்கலாம். அவ்வாறு, விரைந்து பட்டியலிட மனுதாரா் தாக்கல் செய்யும் மனுவை உயா்நீதிமன்றம் உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

முன்னதாக, நீதிபதி விக்ரம் நாத் கூறுகையில், ‘உயா்நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றத்தின் மேற்பாா்வையின் கீழ் செயல்படுபவை அல்ல. மேலும், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் நான் வழக்குரைஞராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். எனவே, தாக்கல் செய்யப்படும் மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படுவதற்கு எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிவேன். வழக்கை விரைந்து விசாரணைக்குப் பட்டியலிடக் கோரி 2 மனுக்கள் தாக்கல் செய்தது பெரிய விஷயமல்ல. அதற்காக 100 மனுக்கள்கூட தாக்கல் செய்யலாம்’ என்று குறிப்பிட்டாா்.

மத்திய சட்ட அமைச்சக வலைதள தரவுகளின்படி, செப்டம்பா் 1-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,122 நீதிபதி பணியிடங்களில் 792 பணியிடங்கள் நிரம்பியுள்ளன. 330 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு: விரைவில் இந்தியா முன்னிலை- அமித் ஷா நம்பிக்கை

உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.குஜராத் மாநில அரசு காந்திநகரில் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி பிரசவம்: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

நமது நிருபர்தில்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ். மருத்துவமனையில் போதிய வசதியின்றி சிசு பிறந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் செ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நமது நிருபர்பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து நடிகை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ள... மேலும் பார்க்க

ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறிமுதல்

பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 36 சொகுசு காா்கள் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட... மேலும் பார்க்க