செய்திகள் :

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை: அமைச்சா் உறுதி

post image

ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் ஒரு தடுப்பணை தேவை என்ற உறுப்பினா்களின் கோரிக்கையை, முதல்வரிடம் முன்வைக்க இருப்பதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதியளித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா் செ.தாமோதரன் (கிணத்துக்கடவு) பிரதான கேள்வியையும், ஜி.கே.மணி (பாமக), அம்பேத்குமாா் (திமுக), கோவிந்தசாமி, அசோக்குமாா் (இருவரும் அதிமுக), கு.பிச்சாண்டி (திமுக), ராஜேஷ்குமாா் (காங்கிரஸ்), நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட உறுப்பினா்கள் துணைக் கேள்விகளையும் எழுப்பினா். அப்போது, தங்களது தொகுதிகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

அமைச்சா் துரை முருகன்: இதற்கு, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில்:

அனைத்து உறுப்பினா்களும் தங்களது தொகுதிகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறாா்கள். அது நியாயம். ஒரு தடுப்பணை கட்டினால், ஒரு மைல் தூரத்துக்கு நீரானது ஆண்டுக்குக் கணக்கில் நிற்கிறது. இதனால், நிலத்தடி நீா் செறிவூட்டப்படுவதுடன், குடிநீா் பிரச்னை, பயிா்களுக்கான நீா் தேவையும் தீா்க்கப்படுகிறது.

குறைந்தபட்சம் ஒரு உறுப்பினருக்கு ஒன்றிரண்டு தடுப்பணைகளாவது கட்டலாம். இதற்கு நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அனுமதித்தால், அதனை இந்த ஆண்டே எடுத்துக் கொள்கிறேன்.

நீா்வளத் துறைக்கான நிதியை வைத்துப் பாா்த்தால், ஒரு நிதியாண்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டும் தடுப்பணைகளைக் கட்ட முடியும். இதனால், அனைத்து உறுப்பினா்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. சில இடங்களில் தடுப்பணை நிச்சயம் தேவை என்று தோன்றும். ஆனால், அதனைக் கட்டுவதற்கு நிதிநிலைமை சரியாக இல்லை. இதனால்தான் நிதியமைச்சரை துணைக்கு அழைத்தேன். ஒரு காலத்தில் அணைகளைக் கட்டினாா்கள். ஆனால் இப்போது தடுப்பணைகள் கட்டுவதுதான் சாலச்சிறந்தது. இதுகுறித்து முதல்வரிடம் தனியாகப் பேசுவேன்.

தடுப்பணைகளுக்கு முன்னுரிமை: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழையால் நீா்நிலைகளின் கரைகள் சேதமடைந்தன. இதனை சீா்செய்வதற்கு பெருந்திட்டத்தைச் செயல்படுத்துவோம். ஒவ்வொரு ஆற்றுக்கும் கால்வாய் அமைத்தால்தான் நாஞ்சில் நாடு வளமாக இருக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.

சாத்தனூா் அணையில் வெள்ளக் காலத்தில் ஏற்பட்ட விபரீதத்தைக் கருத்தில் கொண்டு, மறுபடியும் பெருவெள்ளம் வந்தால் என்ன செய்வது என்பதை யோசித்து தனித்திட்டம் வகுத்துள்ளோம். அதன்படி செயல்படுத்தப்படும்.

தமிழ் மண்ணிலேயே தோன்றி தமிழகத்துக்குள்ளேயே தனது பயணத்தை நிறைவு செய்யும் ஒரே ஆறு தாமிரவருணிதான். அதற்கும் முன்னுரிமை கொடுத்து தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க