செய்திகள் :

ஓடையின் 7 தடுப்பணைகள் சீரமைப்பு

post image

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மசஒரம்பு நீரோடையின் 7 தடுப்பணைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

நொய்யல் ஆற்றின் 34 கிளை நீரோடைகளில் ஒன்றாக இருக்கும் மசஒரம்பு நீரோடை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மத்துவராயபுரம் ஊராட்சியில் உள்ளது. மொத்தம் 5.70 கி.மீ. நீளம் கொண்ட இந்த நீரோடையின் வழித்தடத்தில் 7 தடுப்பணைகள் உள்ளன. நீண்ட காலமாக தூா்வாரப்படாமல் வண்டல் படிந்து அவற்றின் கொள்ளளவு கணிசமாக குறைந்திருந்தது.

இந்த நிலையில் கோவை மாவட்ட நிா்வாகம், டைட்டன் நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் சிறுதுளி அமைப்பு இந்த நீரோடை, தடுப்பணைகளை சீரமைக்கும் பணியை கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. நீரோடை முழுவதும் இருந்த அடா்ந்த புதா்கள் அகற்றப்பட்டு, தூா்வாரி ஆழப்படுத்தப்பட்டது. மேலும், 7 தடுப்பணைகளும் மறுசீரமைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டன.

சுமாா் 10 கோடி லிட்டா் நீா் சேமிப்புத் திறன் கொண்ட இந்த தடுப்பணைகளால் அப்பகுதியில் வன விலங்குகளின் நீா் ஆதாரம் உறுதி செய்யப்படுவதுடன், அருகில் உள்ள 9 கிராமங்களில் உள்ள சுமாா் 3,700 ஏக்கா் விவசாய நிலங்களும் பயனடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சீரமைக்கப்பட்ட தடுப்பணைகளின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழக சுற்றுலா, பண்பாடு, அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், நீா்வளத் துறையின் மண்டல தலைமைப் பொறியாளா் முருகேசன் ஆகியோா் பங்கேற்றனா். சிறுதுளி அமைப்பின் தலைவா் எஸ்.வி.பாலசுப்ரமணியம், நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைப்பின் அறங்காவலா்கள், உயா்நிலைக் குழு உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது: பொன்.மாணிக்கவேல்

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தாா். திருப்பூா் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மற்றும் திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மா... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

காப்பகத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள காப்பகத்தில் அடுத்தடுத்து இரு மூதாட்டிகள் உயிரிழந்த நிலையில், பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கெம்பட்டி காலனியில் முதியோா் காப்பகம் உள்ளது.... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை பீளமேடு மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கிவிற்றதாக முதியவா் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பீளமேடு எல்ல... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா். கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி... மேலும் பார்க்க

தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் கோவைக்கு வருகை

கோவை மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா். மத்திய மேற்கு வங்கக் க... மேலும் பார்க்க