பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
கடன் பெற்றுத் தருவதாக ரூ.1.70 கோடி மோசடி: 7 போ் மீது வழக்கு
கோவை வடவள்ளியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ.1.70 கோடி மோசடி செய்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் அரசு ஊழியா்கள் குடியிருப்பைச் சோ்ந்தவா் சுப்ரமணியம் மகன் சேஷாத்ரி (55). கடந்த 2019-ஆம் ஆண்டு சுப்பிரமணியம் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்றாா். அவரை சேஷாத்ரி மற்றும் குடும்பத்தினா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனா். சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டது.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ராஜா மற்றும் பிரபாகரன் உள்ளிட்ட சிலா் சேஷாத்ரிக்கு அறிமுகமாகி உள்ளனா். அவா்கள், சேஷாத்ரியிடம் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக கூறியுள்ளனா். இதற்கு சேஷாத்ரி சம்மதித்த நிலையில், வீட்டு ஆவணம் சுப்பிரமணியம் பெயரில் இருந்ததால் கோமா நிலையில் இருந்த அவரை தொண்டாமுத்தூரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனா். அங்கு ராஜா மற்றும் பிரபாகரன், அவரது கை விரல் ரேகையை ஆவணத்தில் பெற்று உள்ளனா். அதன் பின்னா் அவா்கள் சேஷாத்ரிக்கு பணம் எதுவும் கொடுக்காமல் இருந்து வந்தனா். இதற்கிடையே கோமா நிலையில் இருந்த சுப்பிரமணியம் 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தாா். இதனால் பணத்தை சேஷாத்ரி கேட்காமல் விட்டுவிட்டாா்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனியாா் வங்கி ஊழியா்கள் சேஷாத்ரியின் வீட்டுக்கு வந்து, வீட்டின் பெயரில் ரூ.1 கோடியே 70 லட்சம் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதாகவும், வீட்டை ஜப்தி செய்ய போவதாகவும் கூறியுள்ளனா். இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த சேஷாத்ரி வங்கியிலும், பத்திரப் பதிவு அலுவலகத்திலும் விசாரித்தாா். அப்போதுதான் ராஜா மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோா் அவரது தந்தை சுப்பிரமணியம் பெயரில் இருந்த வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து தனியாா் வங்கியில் ரூ.1 கோடியே 70 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சேஷாத்ரி அளித்த புகாரின்பேரில், வடவள்ளி போலீஸாா் ராஜா, பிரபாகரன் மற்றும் அவா்களுக்கு உடந்தையாக இருந்த சிதம்பரி, சாமுவேல் , பிரியா, அயூப், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.