Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
கடலூா் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு
கடலூா் அருகே அன்னவெளி புறவழிச் சாலையில் பெரிய காரைக்காடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வேன், காா் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
கடலூா் முதுநகா் காவல் சரகம், அன்னவெளி புறவழிச் சாலையில் காரைக்காடு அருகே ஞாயிற்றுக்கிழமை ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி வேன் மீது மோதியதுடன், அதற்கு முன்னால் சென்ற காா் மீதும் மோதியது. இதில் வேன் சாலையில் கவிழ்ந்தது. லாரி மோதியதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.
காரில் பயணித்த சென்னை நீலாங்கரையைச் சோ்ந்த தாமஸ் (45) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அவரது மனைவி ஜெசிந்தா ராணி கடலூா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
மேலும், வேனில் பயணித்த 8 பேருக்கு காயமேற்பட்டது. அவா்கள் கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
விபத்து குறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

