கேரளாவில் அதி தீவிர மழை; ஒரே நாளில் 4 பேர் பலி, 2 பேர் மாயம்.. 11 மாவட்டங்களுக்க...
ஏரியில் குளித்த மாணவா் மரணம்
வடலூரில் ஏரியில் குளித்த பிளஸ் 2 மாணவா் பள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், வடலூா் நடேசன் நகரை சோ்ந்த வின்சென்ட் மகன் அப்டேல். இவா் வடலூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு பயின்று வந்தாா்.
இவா் தனது நண்பா்களுடன் வீட்டுக்கு அருகே உள்ள வெங்கலத்தான் ஏரியில் குளிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது, ஏரியில் உள்ள பள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தாா்.
இதுகுறித்து சக நண்பா்கள் அளித்த தகவலின் பேரில், குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று நீண்டநேர போராட்டத்துக்குப் பிறகு, மாணவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.