செய்திகள் :

கடைசி ஒருநாள்: பெத் மூனி சதம் விளாசல்; இந்தியாவுக்கு 413 ரன்கள் இலக்கு!

post image

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 412 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.

பெத் மூனி சதம் விளாசல்; இந்தியாவுக்கு 413 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 412 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய அலீஸா ஹீலி மற்றும் ஜியார்ஜியா வோல் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், அலீஸா ஹீலி 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.

இதனையடுத்து, ஜியார்ஜியா வோல் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய ஜியார்ஜியா வோல் 68 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், எல்லிஸ் பெர்ரி மற்றும் பெத் மூனி ஜோடி சேர்ந்தனர்.

களமிறங்கியது முதலே பெத் மூனி அதிரடியில் மிரட்டினார். எல்லிஸ் பெர்ரி 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போதிலும், பெத் மூனி அதிரடியை நிறுத்தவில்லை. அதிரடியாக விளையாடிய அவர் 57 பந்துகளில் சதம் விளாசி, ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய மூன்றாவது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அவர் 75 பந்துகளில் 138 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் 23 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரேனுகா சிங் மற்றும் தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளையும், கிராந்தி கௌத் மற்றும் ஸ்நே ராணா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

Australia, batting first, were bowled out for 412 runs in the third ODI against India.

இதையும் படிக்க: உலகக் கோப்பையை வெல்ல சுதந்திரமாக விளையாடுவது மிகவும் முக்கியம்: பாக். கேப்டன்

சூப்பர் 4 சுற்று: இலங்கை பேட்டிங்; பிளேயிங் லெவனில் துனித் வெல்லாலகே!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நிறை... மேலும் பார்க்க

அதிவேக சதம் விளாசி ஸ்மிருதி மந்தனா சாதனை!

ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ப... மேலும் பார்க்க

தந்தை மறைந்த ஒரே நாளில் இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்த துனித் வெல்லாலகே!

தனது தந்தை இறந்த அடுத்த நாளே இலங்கை அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகே அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.இலங்கை அணியின் இளம் வீரர்களில் ஒருவரான துனித் வெல்லாலகேவின் தந்தை நேற்று முன் தினம் (செப்டம்பர் ... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிவேக சதம் விளாசி பெத் மூனி சாதனை!

ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிவேக சதம் விளாசி ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலிய மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகி... மேலும் பார்க்க

உலகக் கோப்பையை வெல்ல சுதந்திரமாக விளையாடுவது மிகவும் முக்கியம்: பாக். கேப்டன்

உலகக் கோப்பையை வெல்ல சுதந்திரமாக விளையாடுவது மிகவும் முக்கியம் என பாகிஸ்தான் மகளிரணி கேப்டன் ஃபாத்திமா சனா தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செம்படம்பர் 30 ஆம்... மேலும் பார்க்க

இந்தியா - பாக். போட்டிக்கு மீண்டும் நடுவராகும் பைகிராஃப்ட்; இந்த முறை சூர்யகுமார் கை குலுக்குவாரா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு ஆண்டி பைகிராஃப்ட் மீண்டும் நடுவராக செயல்படவுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் இந... மேலும் பார்க்க