செய்திகள் :

``கட்சிப் பணி செய்ய முடியாதவர்கள் ஒதுங்கி ஓய்வெடுங்கள்'' -அமைச்சர் பேச்சு, திமுகவினர் கொந்தளிப்பு

post image

மதுரை உத்தங்குடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

மதுரை உத்தங்குடியில் நடைபெற்ற மதுரை வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை தாங்கிய அமைச்சர் பி. மூர்த்தி பேசும்போது,

"மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எந்தத் தொகுதியிலும் எந்தவொரு பாகுபாடும் இன்றி செயலாற்றி வருகிறோம்.

அமைச்சர் பி.மூர்த்தி

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 1,122 வாக்குச் சாவடிகளில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் சில வாக்குச் சாவடிகளில் உறுதிமொழி நிகழ்வு நடத்தப்படவில்லை எனத் தெரிகிறது.

தலைமைக் கழகம் சொல்லும் பணிகளைச் செய்ய முடியாத நிர்வாகிகள், கட்சியை விட்டு ஒதுங்கி ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

பணிகளைச் செய்யாத நிர்வாகிகளுக்குப் பதிலாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

சாக்குப் போக்கு சொல்ல நேரம் இல்லை

நாங்கள் என்ன அரசு வேலையா பார்க்கிறோம்?" என சில நிர்வாகிகள் கேட்டுள்ளனர். அப்படிக் கேட்கும் நிர்வாகிகளை திமுகவை விட்டு விடுவிக்கத் தயாராக இருக்கிறோம்.

வரும் காலங்களில் திமுகவினருக்கு வேலைப்பளு கடுமையாக இருக்கும். கட்சிப் பணியில் நிர்வாகிகள் சாக்குப் போக்கு சொல்வதற்கு இனி நேரமும் இல்லை, காலமும் இல்லை.

தொகுதி பொறுப்பாளர்கள் சொல்லும் பணிகளை பூத் கமிட்டியினர் செய்தே ஆக வேண்டும்" என்று பேசியுள்ளார்.

அமைச்சர் பி.மூர்த்தி
அமைச்சர் பி.மூர்த்தி

`பண்ணையார் போல் உத்தரவு'

இந்தப் பேச்சு திமுக நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசியவர்கள்,

"கட்சியில் கீழ்மட்ட நிர்வாகிகள் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளனர். அமைச்சருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மட்டும் வசதியாக இருக்கிறார்கள்.

அடிமட்ட நிர்வாகிகளின் பிரச்னைகளை அவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இந்த நிலையில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் கட்சி நிர்வாகிகளை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதைவிட பண்ணையார் போல் உத்தரவிடுகிறார்.

அவருக்கு முன்னாள் இங்கு கட்சியை வளர்த்தவர்கள் எல்லாமே அடக்கமாகத் தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து பேசுகிறார்.

ஏற்கெனவே கூட்டணிக் கட்சியினரான சிபிஎம், விசிக நிர்வாகிகள் அமைச்சர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் சொந்தக் கட்சியினரின் வெறுப்பையும் சந்திக்க அவர் தயாரா?" என்று தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

டெல்லியில் நடந்த இந்தியா - அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை; பாசிட்டிவ் முடிவா?

சமீப மாதங்களாக இந்தியா–அமெரிக்கா இடையே சுமூகமான வர்த்தக சூழல் நிலவவில்லை. இதற்கு அமெரிக்கா, இந்தியா மீது விதித்த கூடுதல் வரிதான் முக்கிய காரணம். இந்நிலையில், இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்... மேலும் பார்க்க

`பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே' - மோடிக்கு போன் செய்த ட்ரம்ப்; என்ன பேசினார்கள்?

இன்று இந்தியப் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள். இதை முன்னிட்டு நேற்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், மோடிக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிர... மேலும் பார்க்க

CM Stalin பயந்துட்டார், Plan-ஐ மாற்றும் Vijay | TVK Arunraj Exclusive Interview | Vikatan

தவெக தலைவர் விஜய்யின் திருச்சி மற்றும் அரியலூர் தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்தகட்ட திட்டம் குறித்து தவெக-வின் கொள்கை பரப்பு பொதுச்செ... மேலும் பார்க்க

War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மானம் சொல்வது என்ன?

கத்தார் மீது தாக்குதல்:இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கத்தாரும், எகிப்தும் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை ந... மேலும் பார்க்க

Israel: நெதன்யாகு வீட்டின் முன் போராட்டம்; சொந்த நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கிடையேயான போரில் இதுவரை காஸா பகுதியில் லான்செட் இதழின் ஆய்வின்படி 70,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். அவர்களில் 59.1% பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள். 1,6... மேலும் பார்க்க

அமித் ஷாவிடம் தனியாக ஆலோசனை நடத்திய இபிஎஸ்; டெல்லி சந்திப்பில் பேசப்பட்டவை இதுதானா?

கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்ததால் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்த வாரம் டெல்லிக்கு... மேலும் பார்க்க