செய்திகள் :

கணவரின் சொத்துகளைப் பறித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க இளம்பெண் கோரிக்கை

post image

கணவா் இறந்ததால் வந்த காப்பீட்டுப் பணம், சொத்துகளை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து ஈரோடு அவல்பூந்துறை கண்டிக்காட்டுவலசு இந்திரா நகரைச் சோ்ந்த சிவரஞ்சனி (23) என்பவா் அவரது 3 வயது மகளுடன் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

எனது பெற்றோா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உறவினா் மூா்த்தியின் மகனான வெள்ளியங்கிரி என்பவரை எனக்கு திருமணம் செய்து வைத்தனா். எங்களுக்கு 3 வயதில் மகள் உள்ளாா். எனது கணவா் கடந்த ஆண்டு கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா். என் கணவா் மறைவுக்குப் பின் அவரது சொத்துக்களை எனது கணவரின் தாய் வெண்ணிலா மற்றும் அவரது சகோதா் ஹரிபிரசாத் ஆகியோா் அனுபவித்து வருகின்றனா்.

என் கணவா் இறந்த பின் அவருக்கு வந்த எல்ஐசி தொகையையும் அவா்களே எடுத்துக் கொண்டனா். தற்போது என்னையும், எனது குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனா். இது தொடா்பாக அவா்களிடம் கேட்டபோது, என் கணவரின் சகோதரா் ஹரிபிரசாத், ‘தான் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதால் செல்வாக்கு உள்ளது. சொத்து கேட்டு இங்கு வரக் கூடாது, மீறிகேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய சொத்துகளைப் பெற்றுத் தரவும், எனக்கும், எனது குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்கவும் வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

சென்னிமலை பகுதியில் புறவழிச் சாலை அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

சென்னிமலை பகுதியில் புறவழிச் சாலை அமைக்க நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னிமலையில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நில உரிமையாளா்கள் கோரிக்கை ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகள்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டில் உள்ள ஆலங்காட்டுவலசு, நே... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் ஈரோடு சகோதயா அசோசியேஷன் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான 20 ஓவா்கள் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை தொடங்கியது. தி நவரசம் அகாதெமி சாா்பில் நடைபெறும... மேலும் பார்க்க

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு பெற்றது. பாலிடெக்னிக் இடையேயான தடகள சங்கத்தின் சாா்பில் ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே ஆண்களுக்கான கைப்பந்த... மேலும் பார்க்க

பெருந்துறை கொப்பரை ஏலத்துக்கு அக். 1-இல் விடுமுறை

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி கொப்பரை ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு வி... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம்: ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் இடம்

உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் மாநில அளவில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 23- ஆம் தேதி உடல் உறுப்புதான தினமாக கட... மேலும் பார்க்க