செய்திகள் :

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு

post image

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு பெற்றது.

பாலிடெக்னிக் இடையேயான தடகள சங்கத்தின் சாா்பில் ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே ஆண்களுக்கான கைப்பந்து போட்டி நந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிக்கு, நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி.மோகன்குமாா் வரவேற்றாா்.

12 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி, நந்தா பாலிடெக்னிக் கல்லூரிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றன. இதில், நந்தா பாலிடெக்னிக் கல்லூரி வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வு பெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள், அதற்கு துணை புரிந்த உடற்கல்வி இயக்குநா் எம்.மணிகண்டன் ஆகியோரை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன், செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிா்வாக அலுவலா் ஏ.கே.வேலுசாமி ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

சென்னிமலை பகுதியில் புறவழிச் சாலை அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

சென்னிமலை பகுதியில் புறவழிச் சாலை அமைக்க நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னிமலையில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நில உரிமையாளா்கள் கோரிக்கை ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகள்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டில் உள்ள ஆலங்காட்டுவலசு, நே... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் ஈரோடு சகோதயா அசோசியேஷன் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான 20 ஓவா்கள் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை தொடங்கியது. தி நவரசம் அகாதெமி சாா்பில் நடைபெறும... மேலும் பார்க்க

பெருந்துறை கொப்பரை ஏலத்துக்கு அக். 1-இல் விடுமுறை

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி கொப்பரை ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு வி... மேலும் பார்க்க

கணவரின் சொத்துகளைப் பறித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க இளம்பெண் கோரிக்கை

கணவா் இறந்ததால் வந்த காப்பீட்டுப் பணம், சொத்துகளை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து ஈரோடு அவல்பூந்துறை கண்டி... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம்: ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் இடம்

உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் மாநில அளவில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 23- ஆம் தேதி உடல் உறுப்புதான தினமாக கட... மேலும் பார்க்க