செய்திகள் :

குழந்தை பெற்றால் போனஸ், இலவச பார்ட்டி; சூப்பர் ஆஃபர் வழங்கும் போலந்து ஹோட்டல் - என்ன காரணம்?

post image

போலந்து நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஒரு ஹோட்டல் குழுமம் தனது ஹோட்டலில் தங்கும் தம்பதியினர் குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு பணப்பரிசும், இலவச பார்ட்டிகளும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த வினோத சலுகை, உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.

போலந்தின் மிகப்பெரிய ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆர்ச் (Arche) -ன் தலைவர் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் மக்கள் தொகை குறைந்து வரும் நிலையில் அதனை சரி செய்யும் ஒரு முயற்சியாக தனது நிறுவனம் சமூகப் பொறுப்புடன் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிறுவனத்தின் குழுமத்திற்கு சொந்தமான 23 ஹோட்டல்களில் ஏதேனும் ஒன்றில் தங்கும் குடும்பத்தினர் அந்த காலகட்டத்தில் கருத்தரித்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையின் பெயர் வைக்கும் விழா அல்லது குடும்ப விழாவை அந்த ஹோட்டலை எடுத்து இலவசமாக நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் பிறக்கும் முதல் குழந்தைக்கு சிறப்பு வரவேற்பு பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pregnancy

இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருப்பதால், இந்த நிறுவனத்திடம் சொத்து வாங்கும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் குழந்தை பெற்றுக் கொண்டால் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் இந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலந்து கடுமையாக மக்கள் தொகை நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் இந்தச் சலுகை உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.

விவசாய நிலங்களில் பயிர் சேதம்; ஆதாரம் கேட்டதால் காட்டுப்பன்றியுடன் ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகாவிற்குட்பட்ட அழகாபுரி கிராமத்தில் இருந்து மெட்டல்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் தோட்டப் பாசன நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங... மேலும் பார்க்க

மபி: "உன் நாய் என் பூனையைக் கடிக்குது" - ஒன்று சேர்த்து வைத்த பிராணிகளால் விவாகரத்து கோரும் தம்பதி

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் சேர்ந்த சுக்ராம் என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வளர்ப்பு பிராணிகள் மீது மிகுந்த அன்பு வை... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பிறந்து, சீனாவில் ஸ்டாரான பெண் - ஓர் அடடே ஸ்டோரி!

கைவிடப்பட்ட பாகிஸ்தானிய பெண் குழந்தையை, சீன தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். இன்று அந்த பெண் சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு நட்சத்திரமாக ஜொலிப்பதோடு, தனது ஆரம்பகால ரசிகர் ஒருவ... மேலும் பார்க்க

பாலி: சுற்றுலா சென்ற இடத்தில் இறந்துபோன இளைஞர்; ’இதயம் இல்லை’ - பிரேத பரிசோதனை முடிவில் அதிர்ச்சி!

பாலி தீவில் இறந்த ஒரு இளைஞரின் உடல், இதயம் இல்லாமல் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது..ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் பாலிக்கு சுற்றுலா சென்றிருக... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: "எங்களைப் போகவிடுங்க" - காதலனுடன் போலீஸ் ஜீப் மீது ஏறி நின்று ரகளை செய்த மைனர் பெண்

ராஜஸ்தான் மாநிலம் கோடா என்ற இடத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரைக் காணவில்லை என்று கூறி அவரது பெற்றோர் போலீஸில் புகார் செய்து இருந்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.விசாரணையில் அப்ப... மேலும் பார்க்க

திருமணத்தை மீறிய உறவு: ரூ.2.1 கோடியை கொடுத்துவிட்டு திரும்பக் கேட்ட பெண் - நீதிமன்றம் சொன்னதென்ன?

திருமணம் மீறிய உறவிற்காக பெண் தொழிலதிபர் ஒருவர் 2.1 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். ஆனால் அந்த உறவு ஓராண்டிலே முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரு... மேலும் பார்க்க