செய்திகள் :

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்! தினமும் ரூ. 85 கோடி இழப்பு!!

post image

டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார் நிறுவனத்தின் மீது கடந்த ஆக. 31 ஆம் தேதி சைபர் தாக்குதல் நடைபெற்றது. இதனால் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு கார்கள் உற்பத்தி 4-வது வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டன், சீனா, ஸ்லோவாக்கியா, பிரேசில், இந்தியா என அனைத்து உற்பத்தி மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஊழியர்கள் யாரும் வேலைக்கு வர வேண்டாம் என நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் உள்ள 3 தொழிற்சாலைகளில் மட்டும் 30,000 ஊழியர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

இதனால் தினசரி ஆயிரக்கணக்கான கார்கள் உற்பத்தி தடைபட்டுள்ளது. இதனால் வாரத்துக்கு தோராயமாக ரூ. 600 கோடி(50 மில்லியன் பவுண்ட்) இழப்பு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே நாள் ஒன்றுக்கு ரூ. 85 கோடி இழப்பு ஆகும்.

ஜாகுவார் உற்பத்தி மையங்கள் மட்டுமின்றி அதைச் சார்ந்து இருக்கும் பல நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜாகுவார் உற்பத்தி மையம் மூடப்படுவது வருகிற அக். 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதலால் முக்கிய தரவுகளை இழந்துள்ளதாகவும் அதனை மீட்டெடுக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரிட்டன் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளின் உதவியுடன் தொழில்நுட்பத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எனினும் ஜாகுவார் நிறுவனம் இதிலிருந்து மீண்டுவர சில மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பணியமர்த்தப்படுவார்களா? என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

பிரிட்டனில் இதற்கு முன்பாக சில நிறுவனங்களும் சைபர் தாக்குதலுக்கு ஆளாகி பல கோடி இழப்பைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

UK Jaguar Land Rover cyberattack shutdown to hit four weeks

இதையும் படிக்க | பெண்களே இரவில் தனித்துப் பயணிக்கிறீர்களா? இதை கண்டிப்பாகச் செய்யுங்கள்!

டிஜிட்டல் அரெஸ்ட்: வாழ்நாள் சேமிப்பான ரூ. 23 கோடியை இழந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி!

டிஜிட்டல் அரெஸ்ட் ஆன்லைன் மோசடியால் தில்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி தான் வாழ்நாள் முழுவதும் சேமித்த ரூ. 23 கோடியை இழந்துள்ளார்.78 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா, ஆகஸ்ட் மாத... மேலும் பார்க்க

எச்-1பி விசா பெற்றுள்ள முன்னணி அமெரிக்க நிறுவனங்கள்!

அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பல, தங்களது வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்-1பி விசா பெற்று அமெரிக்கா வரவழைத்து பணி வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது.அந்த வகையில், அமெரிக்காவில் இருக்கும் அமேஸான் நிறு... மேலும் பார்க்க

காஸா நிவாரண முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 80 பேர் பலி

காஸா முழுவதும் இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய கடுமையான தாக்குதலில் குழந்தைகள் உள்பட 80 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.இந்த வாரத்தில், இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை புதன்கிழமைதான் இந்த அளவுக்குக் கடுமையா... மேலும் பார்க்க

அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவுடன் வா்த்தகம் செய்கின்றன: டிரம்ப்புக்கு சீனா பதிலடி

அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியாவுடன் தொடா்ந்து வா்த்தகம் செய்து வருகின்றன என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசிய டிரம... மேலும் பார்க்க

ஐரோப்பிய விமான நிலையங்களில் இணைய ஊருடுவல்: ஒருவா் கைது

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் தொடா்பாக ஒருவா் பிரிட்டனில் கைது செய்யப்பட்டாா். இது குறித்து பிரிட்டனின் தேசிய குற்றத்த... மேலும் பார்க்க

ராகசா புயல்: 27 போ் உயிரிழப்பு

இந்த ஆண்டின் மிக வலிமையான புயலாக அறியப்படும் ராகசாவால் பிலிப்பின்ஸிலும் தைவானிலும் 27 போ் உயிரிழந்தனா். சூறைக்காற்று மற்றும் வெள்ளப் பெருக்கால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினா். அந்தப... மேலும் பார்க்க